லக்னபுள்ளி விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.

Spread the love

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததியில் விபரீத ராஜ யோகம் யாருக்கு?
10 வருடத்திற்கு ஒருமுறை லக்ன புள்ளியை நகர்த்தி பலன் பார்ப்பதுதான் அட்சய லக்ன பத்ததி.
நாம் பிறக்கக்கூடிய நாளிலிருந்து
லக்கன புள்ளி ராசியில் எப்படி இருக்கு, நவாம்சத்தில் எப்படி இருக்கு, என்பதை பொறுத்துதான் அட்சய லக்ன பத்ததி.

ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது அதில் தெரிந்த விஷயம் என்னன்னா? லக்னபுள்ளி விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.

உதாரணமாக தனுசு லக்னத்தில் பிறக்க கூடிய ஒருவருக்கு லக்னம் கும்பம்.கும்ப லக்னம் வரும்பொழுது ஒரு விபரீத ராஜயோகத்தை அடைகிறார்.
கும்ப லக்னத்தில் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் இருக்கும்.
அவருடைய லக்ன புள்ளி சதய நட்சத்திரத்தில் செல்கிறது.சதய நட்சத்திரம் செல்லும்பொழுது அவர் பிறக்கக்கூடிய ராசி கன்னி.தசா புக்தி ராகு திசையில் செல்கிறது.
ஜாதகருக்கு நகர்ந்து வரக்கூடிய அட்சய லக்ன புள்ளி கும்பம், அங்கு லக்னபுள்ளி சதயம் நட்சத்திரத்தில் ராகு,ராசியுடைய அமைப்பில் சுவாதி நட்சத்திரத்தில் செல்லக்கூடிய ராகு, பிரம்மாண்ட யோகத்தை கொடுத்திருக்கிறது.தசா புத்தியில் அந்த காலகட்டத்தில் 12 பாவங்களும் எங்கு இருந்தாலும் யோகத்தைக் கொடுக்கும்.

12ல் இருந்தால் சுப யோகங்கள் கொடுக்கிறது.
8ல் இருந்தால் விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.
3ல்இருந்தால் மக்கள் தொடர்பான அரசியல் யோகத்தைக் கொடுக்கும்.

சூரியன் நீச்சமாக இருந்தாலும் அதிகமான அரசியல் அமைப்பை கொடுக்கக்கூடிய காலமும் உண்டு.

விபரீத ராஜ யோகம் என்பது அட்சய லக்ன புள்ளியும், தசா புத்தியும்,இரண்டும் ஒரே கிரகங்களோடு ஒத்துப் போனால் விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.

ரோகிணி,அஸ்தம் ,திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களில் அட்சய லக்ன புள்ளி செல்ல அன்றைக்கு தசா புத்தியில் சந்திரன் நடப்பில் இருந்தால் கட்டாயம் விபரீத ராஜ யோகம் உண்டு.

இந்த உலகத்தில் பிறக்கக் கூடிய அனைவருக்கும் முயற்சி உண்டு. ஆனால் எல்லோருக்கும் முயற்சி கிடைப்பதில்லை. முயற்சி ஏதோ ஒரு விதத்தில் தடைபடுகிறது, மறுக்கப்படுகிறது,மறைக்கப்படுகிறது.

ராசியும்,லக்னமும் ஒரே நேர் கோட்டில் பயணிக்க கூடிய காலம் பிரம்மாண்டமானதாக, அரசியல் வாழ்க்கையிலும் திடீர் யோகத்தை கொடுக்கும் என்பதை நாங்கள் ஆய்வு செய்யும்பொழுது நாங்களே பிரமிக்க கூடிய ஒரு விஷயமாக இருந்தது.
கண்டிப்பாக வாழ்க்கையில் ஆய்வு செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு ஒரு மாற்றம் உண்டு.விபரீத ராஜ யோகம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *