அட்சய லக்ன பத்ததியில் ஒருவருக்கு எப்படி பலன் பார்க்கப்படுகிறது?

Spread the love

அன்பே சிவம், அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் அட்சய ராசி என்ற இரண்டாவது நூல் வெளிவந்துள்ளது.

இந்த அட்சய லக்ன பத்ததியில் லக்கனம்  வளரக்கூடிய தன்மைகளும், ராசி வளர்ந்து அதனுடைய பலன்கள் எப்படி இருக்கும் என்ற தன்மைகளும் இரண்டாவது புத்தகத்தில் வெளியிட்டுள்ளேன்.

அட்சய லக்ன பத்ததியில் ஒருவருக்கு எப்படி பலன் பார்க்கப்படுகிறது?

லக்னம் மேஷ லக்னம், அவருடைய 30 வயதில் மிதுன லக்னம்,மிதுன லக்னத்திற்கு தசாபுத்தி பார்க்கணும்.

இன்றைக்கு நடக்கக்கூடிய தசாநாதன் ,புத்தி நாதன் எங்கிருந்து இயக்குகிறார் என்பதை பார்க்கணும். இதுதான் நம்முடைய அட்சய லக்ன பத்ததி பார்க்கப்படுவது.

இதை வைத்தே ஜாதகத்தை ஆய்வு செய்யலாம்.

உதாரணமாக, மிதுன லக்னத்திற்கு ராகு திசை நடக்கிறது. பிறந்த கன்னி ராசி. இன்றைக்கு துலாம் ராசியில் அட்சய ராசி இயங்குகிறது.

ராகு திசை அட்சய லக்னத்திற்கு 5ம் வீட்டை இயக்குகிறது. ஆனால் இந்த ராகு பகவான் ,உதாரணமாக அட்சய லக்கினத்திற்கு 11ல் நிற்கிறது.

அவர் எதிர்பார்த்த யோகங்கள், எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாமே பெரிய பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கும்.

மிதுன லக்னத்திருந்து 5ம் இடத்தை சுவாதி நட்சத்திரத்தில் இருந்து ராகு தசை இயக்குகிறது. தசை நாதன் ராகு 11-ல் இயக்குறார். கோடி கோடியான செல்வம் கோடி கோடியான பிரம்மாண்டத்தை கொடுக்கக்கூடிய காலமாக இது அமைகிறது.

30 வயதிற்குள்ளேயே இந்த ஜாதகருக்கு பெரிய கோடிஸ்வரன் ஆகும் வாய்ப்பு உள்ளது.

குருதிசை வரக்கூடிய காலகட்டத்தில் முதல் மூன்று பாதங்கள் விசாகம்1, விசாகம்2, விசாகம்3, செல்லக்கூடிய காலகட்டத்தில்

3,6க்குடையவன் ராசியிலிருந்து லக்கனம் கடக லக்கனம், ஆக மாறுகிறது. கடக லக்கினத்திற்கு  6ம் வீட்டில் குருபகவான் நடத்துவார்.

குருபகவான் கடக லக்கினத்திற்கு 9ம் வீட்டிலிருந்து நடத்துவார்.இதனால்

எதிர்பாராத யோகம் உண்டாகும்.நாலைந்து கட்டிடங்கள் கட்டி பெரிய கோடீஸ்வரனாக வாழ்வார். மேஷ லக்னம் ஜென்ம லக்னம் ,ALP லக்னத்திற்கு 12ல் குரு. அதனால் யோகத்தை செய்யாது.

கடக லக்னத்தில் 9ம் இடத்தில் இருந்து குரு, தசாநாதன் யோகத்தை கொடுப்பார் என்பது தான் அட்சய லக்ன பத்ததியில் என்னுடைய ஆய்வு.

ஒவ்வொரு காலமும் மாற மாற, வயது மாற மாற ,அவர்களுடைய வாழ்க்கை ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

வயது மாற்றம் கொடுக்கும்போது அட்சய லக்னம் அதற்கு தகுந்தார்போல் பலனை கொடுக்கும்.

  • 20 வயதில் சுக்கிர திசை வருவதற்கும்,
  • 60 வயதில் சுக்கிர திசை வருவதற்கும்,
  • 80 வயதில் சுக்கிர திசை வருவதற்கும் யோகம் உண்டு.

ஒருவருக்கு 40 வயதில் சுக்கிர திசை வரும் பொழுது ஓரளவு வளர்கிறார். 80 வயதில் கோடீஸ்வரன் ஆகிவிடுகிறார்.

மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கக்கூடியது இந்த அட்சய லக்கனம், எங்கிருந்து யார் இயக்குகிறார் என்பதுதான்.

அட்சய லக்னத்திற்கு அடுத்த அதிபதி யார் இயக்குகிறார். உதாரணத்திற்கு கடக லக்னத்திற்கு அடுத்த 10 வருட அதிபதி சந்திரன். அதனால் யோகமாக இருக்கும்.அதற்குள் இருக்கக் கூடிய நட்சத்திரங்கள் புனர்பூசம் ,பூசம், ஆயில்யம். இந்த மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர அதிபதிகள் பலமாக அமையவேண்டும். குரு,சனீஸ்வரன், புதன்.இந்த 3 கிரகங்களும் பலமாக அமைந்தால் மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும், மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

மூன்று கிரகங்களும் சந்திரனுக்கு 6 ,8 , 12ல் மறைந்தால் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இந்த ஜாதகருக்கு யோகத்தை கொடுக்காது.

எந்த பாதையில் அதிகமா வெற்றி கிடைக்கும் என்பதை அடுத்த நிகழ்வில் பார்ப்போம்.

நல்லதொரு நிகழ்வே அமையட்டும்.

நன்றி ,வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/fBQLemFc-vE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *