ரோகிணி நட்சத்திரம் 1ம் பாதம் :

Spread the love

ரோகிணி நட்சத்திரம் 1ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி, “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு காலகட்டங்கள் யோகத்தை கொடுக்கும், அவ யோகத்தை கொடுக்கும்.

அதில் என்னுடைய வாழ்க்கையில் இந்த நேரத்தில் அதிர்ஷ்ட நேரம் என்று அறிந்து கொள்ள இது பயன்படும்.

இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் 1ம் பாதம்,சந்திரனுடைய நட்சத்திரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும்.
ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் கடுமையாக முயற்சி செய்வார்.

இந்த நேரத்தில் அரசியல்வாதியாக இருந்தால் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை சந்திப்பார்.

உடல்நிலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏன்னா?
இவருடைய லக்னம் ரிஷபம்,
ரோகிணி நட்சத்திரம் முயற்சிகள் அதில் விரயம் ஆக்கப்படும்.
முயற்சிகளில் அடித்தளம் போட்டால் தான் வெற்றி ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் ஜாதகருக்கு நோய்வாய்ப்பட வேண்டும்.
சந்திரன் பலப்பட வேண்டும்.

உதாரணமாக,
ரிஷபத்திற்கு அட்டமத்தில்,
தனுசு லக்னத்தில் சந்திரன் இருந்தால்,
ரிஷப லக்னம் சென்றால்,உடல் சார்ந்த பிரச்சினைகள்,வயிறு சார்ந்த பிரச்சனைகள் சிகிச்சை செய்யும் அளவிற்கு விரயத்தை ஏற்படுத்தும்.
அதே சந்திரன் 4ல் இருந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும்.

ஒவ்வொரு மனிதருக்கும்,
இந்த வாழ்க்கையில் கிரகங்கள் எங்கிருக்கிறது என்பதை பார்த்துவிட்டு இன்னும் துல்லியமாக பலன் சொல்ல முடியும்.

ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் விரயதிற்கான காலம்,
இப்பொழுது என்ன செய்யலாம் என்றால்,

வீட்டை புதுப்பிக்கலாம்,இடத்திற்கு சுவர் வைப்பது,வீட்டிற்கு வண்ணம் தீட்டுவது,
அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தை கவனிப்பது,
ஜாதகருக்கு என்ன வேலை கிடைக்கிறதோ,
அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்வது.

ரோகினி நட்சத்திரம் 1ஆம் பாதம் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும். ஆனால் ஜாதகருடைய முயற்சிகள் எல்லாம் விரயத்தை உண்டாக்கும்.

உதாரணமாக தமிழ்நாட்டில் அரசியலில் நிற்கலாமா?
அது விரயத்தை ஏற்படுத்தும்.
அதனால்,
தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்த பின் அவருடைய வாழ்க்கையில் அரசியல் வாய்ப்பு ஏற்படும்.

ஏன்? அரசியல் பற்றி பேசுகிறேன் என்றால்,
சந்திரன் ரோகிணி நட்சத்திரம் சும்மா இருக்க விடாது.
நிறைய விஷயங்களை செய்ய வைக்கும்.
அதனால் விரயம் உண்டாகும்.
அது எல்லாம் கடன்,வம்பு, வழக்கு, நோய் நொடிகள்,
தேவையில்லாத விஷயங்கள்,ஏற்படுத்தும்.

அதேபோல் ரிஷப லக்னத்திற்கு சுக்ரன் பலப்பட வேண்டும்.
சுக்ரன் பல பட்டால்தான் ஜாதகருக்கு யோகம் உண்டு.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு 4 வருடம்,5 மாதம், 10 நாள், யோகத்தைக் கொடுக்கும்.
1 வருடம், 1 மாதம், 10 நாள் ஜாதகருக்கு விரயத்தை கொடுக்கும்.
என்பதுதான் ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம்.

இந்த காலகட்டத்தில் சந்திரனுடைய நிகழ்வு ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்திரனுடைய கோசார சந்திரன் நகர்ந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ரிஷப லக்னத்திற்கு சந்திரன் வைத்து பலன் எடுத்தால் உங்கள் வாழ்க்கையில் சந்திராஷ்டமம் என்று சொல்வீர்கள். அதை தெரிந்து கொள்ளலாம்.
உடல் சார்ந்த விஷயங்கள்,
உடல் சார்ந்து காயம் படுவது,
எளிமையாக கண்டுபிடிக்க ஒரு ஜாதகருக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி,
எடுத்து ஆய்வு செய்தால் ரிஷப லக்னம் என்பது உடல் சார்ந்த நோய்களை ஏற்படுத்தும்.
உடல் சார்ந்த நோய்கள் பாதிக்கப்படும் என்பது தான் உண்மை.

அட்டமாதிபதி தனுசில் கோச்சார சந்திரன் போகும் பொழுது,உடலில் ஒரு தண்டனை கொடுக்கும் உடலில் ஒரு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதே போல் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு நட்சத்திரமும் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஏன் சந்திரன் மட்டும் சொல்கிறேன்? என்றால்,
நீங்கள் எளிமையாக புரிந்து கொள்வதற்காக சொல்கிறேன்.

ஒரு ஜோதிடர்கள் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது சந்திரனை வைத்து மேற்கொண்டால்,
2 1/4 நாளில் முடிவு தெரியும்.

2 1/4 நாளில் ஜாதகர் சார் உடல் அடிபடவில்லை,சந்திரன் பல பட்டால் உடலில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது
ஆனால், சந்திரன் நீச்சமாகவும், 6, 8, 10 இருந்தால் ஜாதகருக்கு கண்டிப்பாக தண்டனை கொடுத்தே தீரும்.
ஜாதகருக்கு கால் சுளுக்கு ஏற்படலாம்.

ஒவ்வொரு 27 நாளும் சுற்றி வருவது கண்டிப்பாக கிரகங்களின் அமைப்பு ஒவ்வொரு ஜாதகத்திற்கும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் புதிதாக முதலீடு செய்யக்கூடாது.

வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் யோகத்தைக் கொடுக்கும்.

முதலீடு போட்டு வெளிநாடு செல்லக் கூடாது அது ஜாதகருக்கு விரயம் உண்டாக்கும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://www.amazon.in/dp/B09636FC97

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *