பங்குசந்தையில் ஈடுபடலாமா…?

Spread the love

அனைவருக்கும் வணக்கம், இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆராய்ச்சியாளர். பங்குச்சந்தையில் ஈடுபடலாமா? பங்குச்சந்தை என்பது ஒரு பலமான நிகழ்வு. ஏன்னா ? ஒவ்வொரு ஜாதகத்திலும் ஆச்சரியமான ஒரு கடல் அளவு இருக்கக்கூடிய நிகழ்வுகளை நாம் கையாளக்கூடிய, கடல் தண்ணியை அள்ளுவது போல் தான் இந்த பங்குச்சந்தை. இது மதி மயக்கக் கூடிய அமைப்பு. ஐந்தாம் வீடு என்பது மனம் புத்தி, ALP லக்னத்திற்கு 5ல் இருக்கக்கூடிய கிரகம் சனி, சந்திரன், ராகு தொடர்பு இருக்கக்கூடாது. இருந்தால் கண்டிப்பாக அந்த ஜாதகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இது தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பங்குச்சந்தையில் ஒரு மில்லி அளவில் மாறுபாடு அடைந்தாலும் கண்டுபிடிக்க முடியும். கண்டாந்திரி தோஷம் என்பது ஒரு கண்டம் விட்டு மற்றொரு கண்டம் மாறுதல். இந்தப் பகுதியில் நான் ஆய்வு செய்துள்ளேன். அதாவது இந்தியாவின் ஜாதகம் என்ன, பங்குச்சந்தை ஜாதகம் என்ன, வங்கி ஜாதகம் என்ன, தமிழ்நாடு ஜாதகம் என்ன, இந்த மாதிரி நான்கு விதமான ஜாதகங்களை ஆய்வு செய்து ஒரு நிமிடத்தில் எந்த கிரகம் ஏறும் எந்த கிரகம் இறங்கும் என்பதை கூற முடியும். இடத்திற்கு ஏற்றார்போல் அவருடைய ஜாதகமும் ,வாங்கும் இடமும் ஏற்புடையது. பங்குச்சந்தையில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஆய்வு செய்ய முடியும். தசாபுத்தி என்பதை இப்படி பிரித்துள்ளேன். அட்சய லக்கனத்துடைய லக்கன புள்ளியை 54 பிரிவுகளாகப் பிரித்து, அதை 65 பிரிவுகளாகப் பிரிக்கும் பொழுது, 1 நிமிடம் 29 வினாடிக்கு லக்னபுள்ளி மாறிக்கொண்டே இருக்கும். 1 நிமிடம் 29 விநாடிக்கு லக்கன புள்ளி மாறும் பொழுது அதனுடைய தன்மைகளும் மாறும். ALP.Astrology என்ற மென்பொருள் goole Playstore ல் உள்ளது. அதில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். நன்றி ,வணக்கம்.

https://youtu.be/3yy4i_8cy60

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *