உங்கள் ராசிக்கு பணவரவு எப்படி இருக்கும்

 

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

இன்றைக்கு நிறைய பேர் கேட்கக்கூடிய கேள்வி எனக்கு எப்பொழுது எல்லாம் வருமானம் வரும்.

 

பொதுவாக அட்சய லக்னத்தில் 2ம் வீடு வருமானத்தை தரக்கூடிய வீடு.

உதாரணமாக கன்னி லக்னம் ஒருவருக்கு அட்சய லக்னமாக போனால்,

வருமானத்தை தரக்கூடிய கிரகம் சுக்கிர பகவான்.

சுக்கிரன் இருக்கக்கூடிய நிலையை பொருத்துதான் வருமானம் அந்த 10 வருடத்திற்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இப்ப சுக்கிரன் கன்னி லக்னம் வரக்கூடிய காலகட்டத்தில் சுக்ரன் நல்லா இருந்தால் வருமானம் நிறைய தருவார். அதனால் இந்த 10 வருடம் இவர்களுக்கு சிறப்பான பலனை தரும்.

அந்த கிரகத்தின் உடைய தன்மையை பொருத்தும் அந்த வருமானத்தை எடுத்துக்க முடியும்.

சுக்ரன் என்றால் இனிமையான கிரகம்,அதனால் எல்லா சுபபோகங்களையும் அந்த குடும்பம் மூலமாக வருமானத்தை கொடுக்கும்,

வருமானத்தை ஏற்படுத்திவிடும்.

 

2ம் வீடு என்பது வருமானம் மட்டும் இல்லை நம்முடைய பேச்சினால்தான் எந்த ஒரு நன்மைகளும் நம்மை தேடி வரும்.

2ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் ரொம்ப இனிமையாக பேசுவாங்க.அவங்களுடைய பேச்சிலேயே அவர்களுக்கு தேவையானது எல்லாரும் பண்ணி கொடுத்துடுவாங்க.

அதில் வருமானம் மட்டும் இல்லை அவங்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லா செயல்களும் வாக்குவன்மையால் கிடைத்து விடும்.

 

சுக்ரன் 3ம் வீட்டில் இருந்தால் வருமானத்திற்கான முயற்சிகள் மட்டும் இந்த காலகட்டத்தில் எடுக்க முடியும்.ஏன்னா? இந்த வீட்டிற்கு வருமானம் என்பது 12-ம் வீடாக போகும்.இந்த 10 வருட காலமும் வருமானத்திற்கான முயற்சிகளில் மட்டும் தான் ஈடுபட முடியும்.

முயற்சி செய்து அந்த வருமானம் அவருக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்றால் இந்த லக்னாதிபதி புதன் எங்கு இருக்கிறார் என்பதை பொறுத்துதான் இந்த முயற்சி அவருக்கு பலனாக மாறுமா?என்பதை

எடுத்துக்கொள்ள முடியும்.

எந்த லக்னமும் அதனுடைய லக்னாதிபதியும் 2ம் அதிபதியும் தொடர்பு பெறும் பொழுது நிச்சயமாக அவர்களுக்கு வருமானத்திற்கான காலம் உண்டு.

அதுபோல் வருமானம் எப்பொழுதெல்லாம் வரும் என்று சாப்ட்வேர் பொதுவடை மூர்த்தி சார் கொடுத்திருக்காங்க.

லக்னாதிபதி வருமானத்திற்கு அதிபதியான 2ம் அதிபதியுடன் இணைந்து எப்பொழுது எல்லாம் செயல்படுகிறதோ

அதாவது 1 வருடம், 1 மாதம், 10 நாள் என்பது ஒரு நட்சத்திர பாதத்தினுடைய அளவுகளாக குறிக்கப்படும்.

இந்த பத்து வருடத்தில் ஒன்பது நட்சத்திர பாதங்களாக பிரிக்கிறாங்க

இந்த 1 வருடம் ,1 மாதம், 10 நாள் அதிபதியோடு எப்பொழுதெல்லாம் இரண்டாம் அதிபதி சம்பந்தப்படுகிறது அப்பொழுது எல்லாம் அவர்களுக்கு வருமானத்திற்கான காலம்.

 

இந்த 1 வருடம், 1 மாதம் ,10 நாள் என்பது 405 நாட்களாகவும், அடுத்துஒரு உட்பிரிவு 45 நாட்களாகவும், அடுத்து ஒரு உட்பிரிவு 5 நாட்களாகவும் அடுத்து 13 மணி நேரம் 20 நிமிடமாகவும்,அடுத்து 1 மணி நேரம் 30 நிமிடமாகவும் அடுத்து 10 நிமிடமாகவும் எடுத்து இருக்காங்க. இதில் ALP சாப்ட்வேரில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

லக்னத்தின் அதிபதியோடு 2ம் இடத்தின் அதிபதி சம்பந்தப்படும்போது உங்களுக்கு வருமானத்திற்கான காலம் இருக்கா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

புதனும், சுக்ரனும் 405 நாள் காலகட்டங்களில் சம்பந்தப்படுகிறதா, இல்லை 45 காலகட்டங்களில் சம்பந்தப்படுகிறதா என்பதை பார்த்தாலே எந்த காலகட்டங்களில் வருமானம் வரும் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

வருமானம் என்பது தொழிலில் மட்டும் இல்லை,அவர்களுடைய குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கலாம். இல்லை சகோதரர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.இல்லை அவர்களுடைய வீடு , வண்டி ,வாகனம், வாடகை இதிலிருந்து வருமானம் எதிர்பார்க்கலாம்.குழந்தைகளிடமிருந்து வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த 13 மணிநேரம் 20 நிமிடத்தில் சுக்ரனும் புதனும் தொடர்பு பெறும் பொழுது அவர்களுக்கு வருமானத்திற்கான வாய்ப்பு உண்டு.

வங்கி கடனுக்கு இந்த 45 நாள் இந்த 2ம் இடத்தோடு சம்பந்தப்பட்டால் அந்த 45 நாளில் வங்கிகடன் கிடைக்கும்.

வருமானம் என்று எடுக்கும் பொழுது ஒவ்வொரு அட்சய லக்னத்திற்கும் இரண்டாம் பாவக அதிபதி லக்னாதிபதியோடு தொடர்பு பெறும்பொழுது மட்டுமே அவர்களுக்கு வருமானம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும்.

 

நன்றி.

ALP-ஜோதிட முறையில் துல்லிய பலன்களை அறிவது எப்படி

அனைவருக்கும் வணக்கம்.
அட்சய லக்ன பத்ததியில் ஒவ்வொரு நாளும் ஒரு தன்மைகளை பற்றி பார்க்கிறோம்.
இன்றைக்கு நிறைய பேருக்கு பாரம்பரிய ஜோதிடத்திற்கும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறைக்கும் என்ன வித்தியாசம் இருக்குனு கேக்குறாங்க அது என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.

ஒரே லக்னம் ஒரே ஒரு கிரகத்தை மட்டும் எடுத்து ALP ல் எப்படி மாற்றி பலன் கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

உதாரணமாக பிறப்பு லக்னம் தனுசு லக்னம் ,இதில் லக்னாதிபதி குரு 11-ல் துலாமில் இருக்கார்.அதாவது குரு 11 இல் நல்லா இருக்கு என்று
எடுத்திருக்கோம்.

இதில் ஒவ்வொரு ALP லக்னம் மாறும்பொழுதும் அது எந்த மாதிரி அமைப்பில் பலன்களை தரப்போகுது என்று பார்க்கலாம். பிறப்பு லக்னம் முடிந்தபின் ALP லக்னம் மகர லக்னமாக வரும் பொழுது அவங்களுக்கு குரு என்ன ஆதிபத்தியம் வாங்குகிறார் என்பது பொறுத்து பலன் மாறுபடும்.
லக்னத்திற்கு லாபமாக இருக்கிறவர்,அடுத்து மகர லக்னமாக வரும்பொழுது 3ம் இடத்திற்கும், 12ம் இடத்திற்கும்,ஆதிபத்தியம் வாங்கி 10 வது வீட்டில் இருக்கும்.
அப்ப 3ம் வீட்டுஉடைய வேலையும் 12 ஆம் வீட்டு வேலையும் 10 வது வீட்டிலிருந்து அவர் தரப்போகிறார்.
ஏன்னா? அவருடைய 3 முயற்சியும், 12 விரயமும் அவருடைய தொழில் ஸ்தானத்திலிருந்து வேலை செய்கிறது.
அவருக்கு தொழில் ரீதியாக முயற்சிக்கு ஏற்ற பலனும் உண்டு, அங்கு விரயமும் உண்டு.
இந்த 10 வருட காலங்கள் தொழில் ரீதியான அழுத்தங்களை சந்திக்க இந்த ஜாதகர் தயாராக இருக்க வேண்டும்.

அடுத்து ஜாதகருக்கு கும்ப லக்னம் ALP லக்னமாக வரும்பொழுது குரு 2ம் வீட்டிற்கும், 11ம் வீட்டிற்கும் ஆதிபத்தியம் ஆடுவார். இதற்கு முன் வீட்டில் விரயமாக இருந்தவர் இங்கு லாபமாக மாறிடுவார்.
வருமானத்தை தரக்கூடிய 2ம் இடத்திற்கு அதிபதியாகிடுவார்.
2, 11 க்கு அதிபதி பாக்யத்தில் 9ம் இடத்தில் இருப்பார்.
இங்கு அவருக்கு தன லாபங்களை பாக்கியமாக இருந்து கொடுக்கும்.
அப்போ ஒவ்வொரு லக்னம் மாறும்பொழுதும் அதனுடைய ஆதிபத்தியம்
எப்படி மாறுகிறதுனு அட்சய லக்ன பத்ததியில் அழகா தெரிந்து கொள்ளலாம்.
12 லக்னத்திற்கும் ஆதிபத்தியங்கள் ஒவ்வொரு கிரகங்களை வைத்து மாறும்.
அது என்ன ஆதிபத்தியம் வாங்குதோ அதற்கு தகுந்த பலன்களை தான் நமக்குத் தரும்.
கும்ப லக்னத்திற்கு நமக்கு பொருளாதார மேன்மைகளை தரக்கூடியவர் குருவாக மாறுகிறார்.
இதுவே கும்பலக்னம் போகும்பொழுது குரு கடகத்தில் இருந்தால் உச்சமாக
இருக்கும். இதுவே 2,11 க்கும் ALP லக்னத்திற்கு 6 வது வீட்டில் இருந்தால் ருண ரோக சத்ரு உபாதைகளை தருவார் வருமானத்தையும் தருவார் லாபத்தையும் தருவார் ,ஆனால் அதெல்லாம் ருண ரோக சத்ரு உபாதைகளில் செலவாகும்.
அதனால் வரக்கூடிய வருமானம் அவருக்கு தேவையில்லாத காரணங்களால் செலவாகிவிடும்.

மீன லக்னம் ALP லக்னமாக போகும்பொழுது குரு 8ம் இடத்தில் இருக்கார். லக்னத்திற்கும் 10க்கும் 1, 10 வீட்டின் வேலையை 8ம் வீட்டில் இருந்து செய்வார்.
அப்போ மீன லக்னத்திற்கு லக்னாதிபதி எட்டில் இருக்கலாமா? இருக்க கூடாது.
10ம் அதிபதியும் 8ல் இருக்க கூடாது.
அதனால் ஜாதகர் இந்த 10 வருட கால கட்டங்கள் , ஏன்னா? லக்னதியுடைய ஆதிபத்தியம் வாங்கும் பொழுது குரு 8ம் இடத்திலிருந்து வேலை செய்வதால் ஜாதகர் தன்னை நினைத்து, தொழிலை நினைத்து 8ம் வீடு வரும்பொழுது கஷ்ட நஷ்டங்களை சந்திக்கக்கூடிய காலகட்டமாக அமையும்.

அதேநேரம் 1, 10 க்கு அதிபதியாகி 8ம் வீட்டில் இருப்பதால் எதிர்பாராத ஒரு நேரத்தில் ஏதாவது வாய்ப்புகளை கொடுத்து யோகத்தை கொடுத்திடுவார்.

அட்சய லக்னம் மேஷ லக்னமாக போகும்பொழுது குரு வாங்கக்கூடிய ஆதிபத்தியம் 9ம் வீட்டினுடைய ஆதிபத்தியமும், 12ம் வீட்டு ஆதிபத்தியமும் வாங்குவார்.அவர் 7ம் வீட்டில் இருந்து வேலை செய்வார்.
அதனால் குரு உடைய தன்மைகள் 9 ,12க்கு அதிபதியாகி பாக்கியத்தையும் 7ம் வீட்டிலிருந்து கொடுப்பார் விரயத்தையும் 7ம் வீட்டில் இருந்து கொடுப்பார்.
அந்த வீட்டினுடைய காரகத்துவங்களையும் கணக்கில் எடுத்துக்கணும்.
அதனால் தந்தை சார்ந்த நிகழ்வுகள் 7ம் வீட்டில் இருந்து அவருக்கு லாபத்தை ஏற்படுத்தும்.
அதேசமயத்தில் அயன சயன போக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12ம் வீடு வரும் பொழுது இங்கு பிரச்சனைகளை கொடுக்கும்.
விரயம் உண்டு. விரயம் யாருக்கு ஏற்படும் , விரயாதிபதி 7ல் இருக்கும்பொழுது ஆணுடைய ஜாதகமாக இருந்தால் மனைவி சார்ந்த விரயமும்,
பெண்ணுடைய ஜாதகமாக இருந்தால் கணவன் சார்ந்த விரயமும்,பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

அட்சய லக்னம் ரிஷப லக்னமாக போகும்பொழுது ,ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம். ஏன்னா?ரிஷப லக்னத்திற்கு 8ம் வீட்டினுடைய ஆதிபத்தியமும், 11-ம் வீட்டு ஆதிபத்தியமும் 6வது வீட்டிலிருந்து செயல்படுத்துவார். இங்கு குரு உடைய தன்மைகள் சிறப்பாக இருக்காது. என்ன காரணம்? லக்னத்திற்கு 8ம் வீட்டுடைய ஆதிபத்தியம் அஷ்டமாதிபதி குரு 6ம் வீட்டிலிருந்து அவருக்கு பிரச்சனைகளை தரக்கூடிய காலமாக இருக்கும்.
அவரே 11ம் வீட்டிற்கும் அதிபதியாகிறார்.லாபத்தை தருவாரானா?அவர் இருக்கக்கூடிய இடம் ALP க்கு 6ம் வீடு. ருண ரோக சத்ரு உபாதைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பதால் பிரச்சனைகளை தான் அதிகமாக கொடுப்பார்.

அட்சய லக்னம் மிதுன லக்னமாக போகும்பொழுது , குரு 5வது வீட்டில் இருப்பார். 7வது வீட்டிற்கும், 10 வது வீட்டிற்கும் வேலையை 5வது வீட்டில் இருந்து செய்வார். ஜாதகருக்கு மிது லக்னத்திற்கு 7க்கு ஆதிபத்தியம் குரு ,10 க்கு அதிபத்தியம் குரு 5வது வீட்டில் இருந்து வேலை செய்யும்.
அதனால் அவருடைய எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகள் எல்லாம் கூட்டு தொழில் செய்யலாமா ,நல்ல லாபங்கள் கிடைக்குமா என்றஎண்ணங்களில் தான் போகும். அவர் செயல்படுத்துவரானா தொழில் ஸ்தானத்திற்கு பிரச்சனைக்குரிய காலமாக இருப்பதால் செயல் வடிவம் இங்கு ஆகாது.
யோசனையிலேயே காலத்தை நகர்த்துவார்.
திருமணம் சார்ந்த நிகழ்வு, நண்பர்கள் சார்ந்த நிகழ்வு ,கூட்டுத் தொழில் சார்ந்த நிகழ்வு, இவருக்கு யோகத்தை கொடுக்கும்.
ஏன்னா? 7ம் பாவகத்தின் மூலமாக குரு நல்ல பலன்களை கொடுப்பார்.

குழந்தை பாக்யம் உண்டா/ இல்லையா

 

வணக்கம்.

இன்றைய காலகட்டத்தில் நிறையபேர் குழந்தை பாக்கியம் தடையினால் நிறைய பேர் டெஸ்ட் டியூப் பேபி நோக்கி போயிட்டு இருக்காங்க. இதற்கு
எந்த மாதிரியான கிரகங்கள் காரணம்? ALP முறையில் இதை எப்படி பார்க்கலாம் அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் தனிப்பட்ட முறையில் தான் பலன் சொல்ல முடியும்.ஏன்னா இது ஒரு நபர் சார்ந்த நிகழ்வு அல்ல,இரண்டு பேருடைய முடிவு. கணவன் மனைவியுடைய அமைப்பு.
இப்போ,கை வலித்தால் இதற்கு காரணம் இதுதான் அப்படின்னு சொல்லலாம்.
ஆனால் குழந்தை இல்லனா கணவன் நிலையில் பிரச்சனை இருக்கா?
மனைவி நிலையில் பிரச்சினை இருக்கா ?என்பதை பார்க்கணும்.
ரொம்ப ரொம்ப கவனமாக பார்த்தால் தான் இதை சொல்லமுடியும்.

எல்லாரும் என்ன சொல்றாங்கனா, சார் நா நிறைய தடவ டாக்டர் பார்த்த, 2 தடவ டெஸ்டியூப் பேபி வச்சி பாத்த , ஆனால் எதுவும் நடக்கல இதனால் பொருளாதார செலவு ஒரு பக்கம், மன உளைச்சல் , உடலில் வேதனை இதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்.

இதை பற்றி நிறைய நிகழ்வுகள் நான் ஆய்வு செய்தபோது , இரண்டு பேருவுடைய நிலையிலும் பிரச்சனை இருக்கும். மருத்துவம் என்று போய்ட்டால் பெண்ணுடைய பலமாக இருந்தால் கூட கருமுட்டை எடுத்து வளர்த்து கரு உண்டாக்கலாம்.
அதனால் பெண்ணுடைய ஜாதகத்தை முதலில் பார்க்கணும்.

இதுவே ALP லக்னம் மேஷ லக்னம் ஒருவருக்கு வந்தால் ,எப்பொழுதும் சனிபகவான் பல படனும். ஏன்னா? சனி பகவான் எங்கு இருக்கு என்று பார்த்துட்டு தான் பலன் சொல்ல முடியும். சனி பகவான் இருந்தால் சூரியனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு பார்கனும். சனி பகவானும், சூரியபகவானும் 6,8 ல் சஷ்டாஷ்டகமாக இருந்தால்,குழந்தை பிறப்பு, மருத்துவம் மூலமாக குழந்தை பிறப்பு ரொம்ப ரொம்ப கடினம்.

ALP ரிஷப லக்னம் வந்தால் இதற்கும் சனிபகவான் பலபடனும்.இல்லைனா ரொம்ப கஷ்டம்.புதனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு , புதனும் சனியும் Alp ரிஷப லக்னத்திற்கு 6 ல் இருந்தால், மருத்துவ செலவு உண்டு
அதுவே அட்டமத்தில் இருந்தால் எதிர்பார்த்த மாதிரி இருக்காது.
அகவும் ரிஷப லக்னத்திற்கு புதனும், சனியும் 11 ல் இருந்தால் குழந்தை பிறப்பு கிடையாது.
Alp முறையில் குழந்தை பிறப்பு வாய்ப்பு இருக்கு என்று சொல்ல காரணம் ஒரு கிரகம் பலமாக இருந்தால் வாய்ப்பு இருக்கு என்று சொல்லுவோம்.
2 கிரகம் பலமாக இல்லைனா இதற்கு முயற்சி செய்ய வேண்டாம்,வேற ஏதாவது தத்து குழந்தை எடுத்துக்கோங்கனு சொல்லிடுவோம்.
2 கிரகம் நல்லா இருந்தால் முயற்சி செய்யுங்கள், டாக்டர் அறிவுரை கேட்டுகோங்க.
அறிவியலுடைய அமைப்பு இன்றைக்கு நிறைய வளர்ச்சியடைந்துவிட்டது.
காரண காரியங்கள் சில பேருக்கு முன்கூட்டியேசில விஷயங்களை சொல்லும்.

முதலில் குழந்தை பிறப்புனா குரு பலப்படனும்.குரு பகவான் பலபட்டால் மட்டும்தான் அந்த குழந்தை பிறப்பு ஆத்மார்த்தமாக சந்தோஷமாக இருக்கும்.
இல்லை எனக்கு குருநீசமாக இருக்கு, குரு ராகுவோட சேர்ந்திருக்கு,இப்படி குரு ஏதாவது ஒரு கிரகத்தோடு சேர்ந்து இருந்தால்,
குருவும் சூரியனும் சேர்ந்திருந்தால் குழந்தை பிறப்பில் பெரிய அழுத்தத்தை கொடுக்கும்.
அப்படி ஒரு நிகழ்வு இருக்கு. ஆனால் எனக்கு குழந்தை பிறந்துட்டு
அப்படி சொன்னாங்கன்னா?

குழந்தை பிறப்பு பிறந்த பிறகு குழந்தை மூலமாக தண்டனை அனுபவிக்க வேண்டும் ஜாதகர் என்பது விதியாக இருக்கும்.
குரு பலபட்டால் மட்டும்தான் வம்சவிருத்தி என்பது ஒரு ஆணுக்கு செவ்வாய் பலப்படனும் , ஒரு பெண்ணுக்கு சுக்ரன் பலப்படனும் ,குழந்தைன்னா குரு பலப்படனும் இந்த மூன்று கிரகம் பலபட்டால் மட்டும்தான் குழந்தை பிறப்பு திருப்தியாக இருக்கும்.குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

ALP மிதுன லக்னம் வந்தால் எப்பொழுதும் சுக்கிரனும், குருவும் பல படனும்.
சுக்கிரன் குரு பலப்பட்டால் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்கும்.
இல்லை சுக்கிரன் – குரு 6, 8 ,10 ,12 இல் இருந்தால் அந்த குழந்தை பிறப்பு எதிர்பார்த்தது போல் இருக்காது.

ALP கடகலக்னம் வந்தால் ,செவ்வாய் பல படனும்.
கடக லக்னத்திற்கு செவ்வாய் பலப்பட்டால் குழந்தை பிறப்பு நல்லா இருக்கும்.
கடக ராசி பொருத்தவரை சந்திரன் செவ்வாய் ஜாதகருடைய உடம்பு வீக்கா இருக்கும்.சாப்பிட மாட்டாங்க, சாப்பிட்டாலும் சரியாக சாப்பிட மாட்டாங்க,உடம்பு அவங்களை கெடுத்துக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுவாங்க.,சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க.

ALP சிம்ம லக்னம் வந்தால், குரு பலபட்டால் கண்டிப்பாக பெரிய யோகத்தை கொடுத்துவிடும். அவர்கள் இருக்கக்கூடிய இடத்தாலேயே பிரச்சனையாகும்.
சிம்ம லக்னத்திற்கு உடம்பில் பிரச்சனை ஒரு பக்கம்,
அதேபோல் பெண்ணாக இருந்தால் நீர் கட்டி, நீங்குமிழி மூலம் பிரச்சனை,
ஆணாக இருந்தால் ஆணாலே பிரச்சனை வரும்.
அதுபோல் கனவு கற்பனைகள், ஆசைகள் மூலமாக கற்பனை மூலமாகவே வாழ்க்கை நடத்தக்கூடிய அமைப்பு சில நேரத்தில் உண்டுபன்னும்.
அந்த கற்பனைகள் மூலமாகவே குழந்தை பிறப்பு தள்ளிப் போகும்.
குரு பலப்பட்டால் மட்டும் தான் யோகத்தை கொடுக்கும்.
குரு சுக்ரன் சப்போர்ட் பன்னால் நல்லா இருக்கும்.

ALP கன்னி லக்னம் வந்தால், புதனும் சனியும் பலப்படனும். புதன் – சனி பலப்பட்டால் , புதன் சனி 6, 8,ல் இல்லாமல் இருந்தால் மருத்துவத்தின் மூலமாக குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு.

ALP துலாம் லக்னம் வந்தால் , சனியும் சந்திரனும் 10 வருட காலம் ALP லக்னத்தில் போனால் மிகமிக கவனமாக இருக்கனும். படுத்தி எடுக்கும்.
துலாம் லக்னக்காரர்கள் தான் குழந்தை தத்து எடுத்துடுவாங்க.
மேஷம், துலாம் தத்து பிள்ளை எடுப்பதில் முதலில் இருக்கும்.
ரொம்ப கஷ்டமாக இருக்கும் சில நேரம் தத்து பிள்ளை எடுக்கும் யோகத்தை கொடுக்கும், சில நேரம் தத்து பிள்ளை எடுத்து அவயோகத்தையும் கொடுக்கும்.

ALP விருச்சிக லக்னம் வந்தால், குரு பலப்படனும். விருச்சிக லக்னம் வந்தால் உடல் உபாதைகள் மூலம் தான் பிரச்சனை இருக்கும்.
உடலில் பிரச்சனை இருக்கும்.
விருச்சிகத்தில் வரும்பொழுது முழுக்க முழுக்க உடலில் தான் பிரச்சனை.
உடலில் கொடுக்ககூடிய சக்தி, பெறக்கூடிய சக்தி, தாங்கக்கூடிய சக்தி இருக்காது.

ALP தனுசு லக்னம் வந்தால் , செவ்வாய் பலப்படனும். செவ்வாய் பலப்பட்டு, புதனும் பலப்பட்டால் இந்த நேரத்தில் டாக்டரிடம் அணுகுமுறைகள் மூலமாகவே தடைபடும். சரியாக டாக்டர் சொன்னதை பின்பற்றினால் யோகம் உண்டு.

ALP மகரலக்னம் வந்தால், சுக்ரன் பலப்படனும், சுக்ரன் பலப்பட்டால் மகர லக்னத்திற்கு யோகத்தை கொடுக்கும்.

ALP கும்பலக்னம் , புதனும் செவ்வாயும் சம்பந்தப்பட்டால் ஏதோ ஒரு வகையில் பலமாக யோகத்தை கொடுக்கும். அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல் மூலமாக தான் குழந்தை பிறக்கும்.

ALP மீன லக்னம் சந்திரனும் குருவும் சம்பந்தப்படனும், இது எதிர்பாரத யோகத்தை கொடுக்கும். சில நேரத்தில் இவர் களுக்கு வைக்கக்கூடிய குழந்தைகள் இரட்டை குழந்தையாக பிறக்கும் அமைப்பு இருக்கு.

வழிபாடு:
மருத்துவம் என்றால் தன் வந்திரி பகவான், அதில் பைரவர் வழிபாடு மட்டும்தான். வேறு ஒன்றும் இல்லை.

குழந்தை இல்லாதவர்கள் காலையில் 4:30 to 6 தலை குளிச்சிடனும்.
ஏன்னா இவர்களுடைய உடல் உஷ்ணம் அதிகரிக்க அதிகரிக்க கர்பப்பை வீக்காகும்.
அடிக்கடி தலைமுடி இறுக்கி பின்னி போடணும் என்று சொல்வேன். ஏன்னா? அந்த காலத்தில் தலைமுடி இறுக்கி பின்னினால் கர்பப்பை சந்தோஷமாக இருக்குமாம். தலைவிரிச்சி போட்டால் உஷ்ணம் அதிகமாகும்.
அதே போல் அந்த காலத்தில் கோலம் போடும் பொழுது பெண்களுக்கு கர்பப்பை விரிவடையும்.
மருதாணி அதிகமாக கை, கால் ல் போடுவாங்க,
நெற்றியில் பொட்டு குங்குமப்பொட்டு வக்கிறது
அந்த காலத்தில் இதெல்லாம் பன்னுவாங்க
இந்த காலத்தில் குல தெய்வம், குரு ஆசிர்வாதம் வேணும்.
ஆத்மார்தமாக திருப்தியாக வாழணும்னா அப்பா அம்மா ஆசிர்வாதம் வேணும்.

நன்றி.