ஒரு ஜாதகருக்கு பணம் எப்படி வரும்?

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் நிறைய விஷயங்களை ஆய்வு செய்கிறோம்.

இன்றைக்கு அட்சய லக்ன பத்ததி முறை மூலம் ஒரு ஜாதகருக்கு பணம் எப்படி வரும்?
அட்சய லக்கனம் என்பது ஒரு லக்னம் நகர்வது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஜென்ம லக்னம் மேஷம்,
யாரோ ஒருவருக்கு மட்டும் அந்த சூத்திரம், அந்த வழிமுறைகள், தெரிந்து வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இருப்பார்.
ஆனால் கடவுள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பார், வரம் கொடுப்பார், அதை தெரிந்து நாம் செயல்படுவது நம் கையில் தான் உள்ளது.

பூட்டும், சாவியும் வெவ்வேறு கையில் இருக்கும் அதை இணைப்பது தான் நம்முடைய வாழ்க்கை முறை.

நம்முடைய எண்ணங்களும், செயல்பாடுகளும் இணைந்து செயல்படும் பொழுது காலங்கள் நமக்கு வழி கொடுக்கும்.
இந்த காலம் தான் நம்முடைய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை.

காலத்தில் ஏற்படக்கூடிய செயல்முறைகள் சரியாக இருந்தால் ஜெயித்து விடுவார்கள்.
இடத்திற்கு தகுந்த மாதிரி நம்முடைய பொருளையும்,நம்முடைய லாபத்தையும்,நம்முடைய வழிமுறைகளும் மாற்றினால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

ஒருவர் மட்டும் ஜெயிப்பதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையின் வழிமுறைகளை தெரிந்து வைத்திருப்பார்கள்.

மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு
வயது 29.
இப்பொழுது மிதுனலக்னம்.
மிதுன லக்னத்தின் 2ம் அதிபதி சந்திரன்.மேஷ லக்னத்திற்கு 2ம் அதிபதி சுக்கிரன்.சுக்கிரனையும் ,சந்திரனையும் நினைத்து வழிபட வேண்டிய விஷயம். இரண்டுமேபெண் தெய்வம் ஆக இருக்கு. மகாலட்சுமி, பத்மாவதி தாயார்.
அப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பெருமாள் சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு வெள்ளிக்கிழமை,திங்கட்கிழமை செல்லவேண்டும்.
திங்கட்கிழமை சோமவார நாள் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் சிவபெருமான் இல்லை தாயார் சன்னதிக்கு செல்லலாம்.
காலத்திற்கு தகுந்த மாதிரி இந்த தெய்வத்தை வணங்கினால் பலன் கிடைக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் செலவு செய்யக் கூடிய வழிமுறைகளை பொருத்து பணம் நம்மிடம் வந்து கொண்டு இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு சுக்கிரன், சந்திரன் என்பது வெண்மை, வெள்ளை என்று வரும்.
வெள்ளை கிளாஸ் டம்ளரில் தண்ணீர் வைத்து வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை உங்களுக்கு தெரிந்த ஸ்லோகத்தை கூறி அந்த தண்ணீரை பருகினால் எளிதாக பணம் சேரும்.

சுக்கிரனும் ,புதனும் சேரும் பொழுது கண்டிப்பாக அந்த நாளில் நீங்கள் பணம் பற்றி பேசி இருக்க வேண்டும், பணம் வாங்கி எண்ணியிருக்கலாம் ஏதாவது ஒரு விஷயம் வாழ்க்கையில் நடந்து இருக்கும்.
இந்த மாதிரி ஒவ்வொரு 12 லக்னத்திற்கும் மேஷ ராசியிலிருந்து மீனம் ராசி வரை பலன் எடுக்க வேண்டும்.

“வழி தெரியாமல் நாங்கள் தேடலே ஆனால் வழி தெரியல” என்பதுதான் இங்கு பொருள்.
வீட்டு தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை சந்திர ஹோரையில் வழிபாடுகள் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இந்த நாட்களில் சந்திரனும் ,சுக்கிரனும் சம்பந்தப்படும்போது பணம் வந்திருக்கும்.

ஜோதிடர்களுக்கு மட்டும் இல்லாமல்
பொது மக்களுக்கும் இந்த அட்சய லக்ன பத்ததி நல்ல பலன்களை கொடுக்கும்.
நல்லதொரு நிகழ்வு அமையட்டும்.
நன்றி, வணக்கம்.

இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள்.கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
என்னிடம் ஒரு நண்பர் கேட்ட கேள்வி:
இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள். இதற்கு என்ன கிரகங்கள் வருது.

என்னை பொறுத்தவரையில் இதற்காக பொருள் விரயம் செய்கிறோம்.அதிகமாக செலவு செய்து அந்த ஆடையை அணியும் பொழுது அவர்களுக்கு சுக்கிரனுடைய தன்மை அதாவது பணத்துடைய மோகம் பணத்துடைய ஆதிக்கம் அவர்களுக்கு குறைவாக இருக்கும்.

கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.
கலாச்சாரம் மாறிவிட்டது என்று நினைத்து நீங்கள் அந்த ஆடையை அணிந்தால் கண்டிப்பாக சுக்கிரனுடைய அமைப்பு பாதிக்கப்படும்.

சுக்கிரன், சனி சம்பந்தப்பட்ட விஷயங்கள் பாதிக்கப்படும் பொழுது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயங்கள், உடல் சார்ந்த விஷயங்கள் கண்டிப்பாக ஜாதகர் சந்திக்கக்கூடும்.
இந்த மாதிரி ஆடைகளை அணிவதால் கண்டிப்பாக பிற்காலத்தில் அவர்கள் நிறைய கஷ்டப்படுவார்கள்.

உடைகள் எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அதேபோல்தான் வண்ணங்களும், வண்ணங்களை பொறுத்து தான் உடல் இயங்குகிறது.

இந்த உலகத்தில் இரண்டு விஷயங்கள்தான் 1.வெளிச்சம்
இன்னொன்று நம் காதால் கேட்கக்கூடிய 2.சத்தம்
வெளிச்சமும், சத்தமும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் முக்கியமானவை. நீங்கள் போடக்கூடிய சட்டைகள்,அணிகலன்கள் வண்ணங்கள்,நம் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாகும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி ,வணக்கம்.

இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள்.கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
என்னிடம் ஒரு நண்பர் கேட்ட கேள்வி:
இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள். இதற்கு என்ன கிரகங்கள் வருது.

என்னை பொறுத்தவரையில் இதற்காக பொருள் விரயம் செய்கிறோம்.அதிகமாக செலவு செய்து அந்த ஆடையை அணியும் பொழுது அவர்களுக்கு சுக்கிரனுடைய தன்மை அதாவது பணத்துடைய மோகம் பணத்துடைய ஆதிக்கம் அவர்களுக்கு குறைவாக இருக்கும்.

கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.
கலாச்சாரம் மாறிவிட்டது என்று நினைத்து நீங்கள் அந்த ஆடையை அணிந்தால் கண்டிப்பாக சுக்கிரனுடைய அமைப்பு பாதிக்கப்படும்.

சுக்கிரன், சனி சம்பந்தப்பட்ட விஷயங்கள் பாதிக்கப்படும் பொழுது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயங்கள், உடல் சார்ந்த விஷயங்கள் கண்டிப்பாக ஜாதகர் சந்திக்கக்கூடும்.
இந்த மாதிரி ஆடைகளை அணிவதால் கண்டிப்பாக பிற்காலத்தில் அவர்கள் நிறைய கஷ்டப்படுவார்கள்.

உடைகள் எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அதேபோல்தான் வண்ணங்களும், வண்ணங்களை பொறுத்து தான் உடல் இயங்குகிறது.

இந்த உலகத்தில் இரண்டு விஷயங்கள்தான் 1.வெளிச்சம்
இன்னொன்று நம் காதால் கேட்கக்கூடிய 2.சத்தம்
வெளிச்சமும், சத்தமும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் முக்கியமானவை. நீங்கள் போடக்கூடிய சட்டைகள்,அணிகலன்கள் வண்ணங்கள்,நம் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாகும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி ,வணக்கம்.

அருள் சார்ந்த மூட்டை என்பது நம்முடைய மனம்

அன்பே சிவம், அன்பே ஆனந்தம் ,

அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

இன்றைக்கு நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிகழ் காலத்தில் நிறைய பேர் தன்னுடைய பயணம் உடைமைகளை தூக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு வந்தனர்.இது பொருள் சார்ந்த மூட்டை, பொருள் சார்ந்த மூட்டையை தூக்கிக் கொண்டு நம்மால் ரொம்ப தூரம் பயணிக்க முடியவில்லை.

அருள் சார்ந்த மூட்டை என்பது நம்முடைய மனம்.

நம்முடைய வாழ்க்கையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நம்முடைய உயிர் பிரிந்து செல்லும் பொழுது,எண்ணங்களும் நிறைவேறாத ஆசைகளும் தூக்கிக் கொண்டு இன்னொரு லோகத்திற்கு செல்லும் பொழுது மிகப்பெரிய அளவில் கஷ்டப்படுவார்கள்.

சில விஷயங்கள் வேணும், வேண்டாம், நம்புகிறோம், நம்பல  இதுதான் உண்மை.

நம் ஜோதிட முறையில் அடைப்பு நட்சத்திரம் என்று சொல்வார்கள்,

அதற்கு 45 நாள் விளக்கு ஏற்றி பரிகாரம் சொல்லுவார்கள்.

 

சுமையுடைய மூலாதாரம் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் நம்முடைய ஆசைகள் தான்.நான் பார்த்த நான் கேட்ட அத்தனை விஷயங்களும் ஆசைகளில் இருந்து தான் ஆரம்பமாகிறது.ஆசைகள் தான் அடிப்படைக் காரணம் அதிலிருந்து பரிணமித்து இன்பமாக, துன்பமாக ,நல்லதாக, கெட்டதாக, பயணமாக,வாழ்க்கையாக, நோய்நொடி யாக, வருமானமாக,சந்தோஷமாக உள்ளது.

மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது மனம் சந்தோஷமாக இருக்காது, அதுவே சங்கடமாக உள்ளபோது மனம் ரொம்ப இறுக்கமாக இருக்கும்.இதனுடைய மூலாதாரம் ஆசை.

இந்த ஆசைகள் உடைய தன்மைகள் ஒவ்வொரு பயணம் முடியும் பொழுது அந்த மூட்டைகளை தூக்கும் பொழுது  தான் நமக்கு தெரியும். ஒண்ணுமே இல்லாத விஷயத்திற்கு தான் நாம் இவ்வளவு நாள் ஆசைப்பட்டுள்ளேன்.ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு தான் சுமைகளாக சுமந்து கஷ்டப்பட்டு உள்ளோம்.

வாழ்க்கையின் சுமைகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ வாழ்க்கையில் மாற்றம் உருவாகும்.

எனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும் நிறைய மூட்டைகளை சுமக்கிறோம்.

நமக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகிறது.நம்முடைய எல்லா எண்ணங்களும் ஒரு மூட்டையாக கட்டி கட்டி வைத்துள்ளோம்.அதனுடைய ஆரம்பமும், முடிவும் ,அன்றைய நாள் இரவில் முடியும் பொழுது மன இறுக்கங்களும், சங்கடங்களும், சார், எனக்கு இரவு சரியாக தூக்கம் வரவில்லை என்று சொல்வார்கள்.

எப்படி தூக்கம் வரும். மனது முழுவதும் அடைத்து வைத்துள்ளோம்.

காலையில் இருந்து இந்த இரண்டு விஷயங்களை முக்கியமாக  கவனிக்கணும். காலையில் மனித உடலின் கழிவுகள், மலம் என்று சொல்லக்கூடிய கழிவுகள்.இரவில் மனம் சொல்லக்கூடிய எண்ணங்கள்.

இந்த இரண்டையும் சுத்தப்படுத்தினால் தான் நம் வாழ்க்கை வாழ முடியும்.

உணவு உண்பது, எண்ணங்களை தூண்டுவது ,இது நம் வாழ்க்கையில் மறுக்க முடியாதது.மறைக்க முடியாது ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்.

தேவையான விஷயத்துக்கு மட்டும் பயணிக்கணும், தேவையான விஷயத்தை மட்டும் பார்க்கணும்.

சுமையை நிறைய தூக்கி சுமந்தால் கண்டிப்பாக உடலும், மனமும் பாதிக்கப்படும்.

சுமையை தூக்கி சுமந்தால்

நெடுந்தூரத்திற்கு பயணிக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுமைகள் வரலாம்.

வாழ்க்கை பயணத்தில்நிறைய சுமைகளை தூக்கி,

அந்த சுமைகள் நம்முடைய ஆசைகள்.

எல்லாவற்றிற்கும் ஆசைப்படலாம். ஆனால், உங்கள் மனம் விரும்பக் கூடிய ஒரு விஷயத்தை மட்டும் தான் அடைய முடியும்.அந்த ஒரு விஷயத்தில் மட்டும் புரிந்து இன்னும் ஆசைப்பட்டால் சந்தோஷமாக இருக்கும்.

10 பொருள்கள் ஆசைப்பட்டு வாங்க முடியாது.

அதே போல் 10 பாதைகளில் உங்கள் வாழ்க்கை செல்ல முடியாது. அந்த ஒரு பாதையில் தான் செல்ல முடியும்.அந்த ஒரு பாதையை முழுவதுமாக அடைந்து விட்டு, மறு பாதையில் செல்லலாம்.

எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால் எந்த பாதையிலும் செல்ல முடியாது.

ஆசைகளும் சுமைகளும் வாழ்க்கையின் இரு கண்கள்.இதை இரண்டையும் சரியாக பயன்படுத்தி,சந்தோஷமாக சென்றால் என்னுடைய ஆசைகளும் நிறைவேறும், என்னுடைய எண்ணங்களும் நிறைவேறும். இதன்படி சென்றால்

வாழ்க்கைப் பயணத்தில் வெற்றியை அடைய முடியும் என்பதுதான் என்னுடைய வாதம்.

அடுத்தவங்க பாதையில் நாம் பயணிக்க முடியாது.

சுமைகளை தேவையான அளவு தூக்கி வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற வேண்டும்.நல்லதொரு நிகழ்வே அமையட்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.

நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/z2ymsfgoONk

அட்சய லக்ன பத்ததியில் பிரசன்னம் எப்படி பார்பது?

அனைவருக்கும் வணக்கம்,

அட்சய லக்ன பத்ததியில் பிரசன்னம் எப்படி பார்பது?

வந்திருக்கவங்க கேள்வி எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்

உதாரணமாக சித்திரை, வைகாசி, ஆனி ,ஆடி மாதம் சூரியன் எங்கே இருக்கும்?

பிரசன்ன லக்னம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் லக்னம் மாரும், உதாரணமாக மென்பொருளில் 1′ முதல்.

120 குள் எதாவது ஒரு எண்,

உதாரணத்திற்கு அவர் சொன்ன எண் 46,  வயது, 46 நம்பர் இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம். 46 வயது எடுத்தேன். ஒரு வயது 3′ நகரும். 12 ராசி கட்டங்களின் மொத்த அளவு 360′

ஒரு மனிதனுடைய ஆயுள் காலங்கள் தசா வரிசைகள் 120.

360/120 அதாவது ஒரு வயதுக்கு நம்முடைய உடல் 3′ பெருக்கம் அடைகிறது.

இதுதான் நம்முடைய அட்சய லக்னம்.

46 x 3 = 138′

அவருடைய லக்னம் நகர்ந்திருக்கிறது. நாம் இரண்டு முறையில் பிரசன்னம் பார்க்கிறோம்.

போன ஜென்மத்தில் நம்முடைய உடல் அழிந்த பகுதியிலிருந்து இப்பொழுது ஆரம்பிக்கப் படுவதை லக்னம் என்கிறோம்.

சூரியனுடைய ஆத்ம கிரகம் எங்கிருந்து அழிக்கப்பட்டதோ அங்கிருந்துதான் தொடங்கும். ரிஷப லக்னத்தில் 8′ மீதம் இருக்கும்.ஒரு நட்சத்திர பாதத்தில் 3, 20 பாகை  6,40 பாகை லக்னப்புள்ளி செல்லும்.

கார்த்திகை 4ம் பாதம் லக்கனத்திலிருந்து ALP லக்னம் என்ன என்பது தான் கேள்வி, 6 என்றால் கடன், வம்பு, வழக்கு, நோய் நொடி சம்பந்தப்பட்டது உருவாகும். சூரியன் பலமான நட்சத்திரம் என்பதால் 1, 2, 3, 4, வீடு, இடம், பொருள், சொத்து வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்டது. சூரியன்எங்கு உள்ளதோ அங்குதான் பிரச்சனை உண்டாகும். ALPலக்னத்திற்கு சூரியன் 3-ம் இடத்தில் உள்ளது.

3ம் இடம் சகோதரம், அதாவது 3, 8,11 சம்பந்தப்படும் பொழுது சகோதர வழியில் இதன் பிரச்சனை உண்டாகும். ஒரு பங்கு பிரித்தால் பிரச்சனை தீரும். கார்த்திகை முடிந்து ரோகிணி நட்சத்திரம் வந்தால் கண்டிப்பாக மாற்றம் உருவாகும். 1 டிகிரி 4 மாதம். 8 மாதம் பிரச்சனையாக இருக்கும். வீடு வாங்கினால் விரயம் ஏற்படும். விற்றாலும் பணம் சரியாக கிடைக்காது. கேட்கக் கூடிய நேரத்தில் கேள்விக்கான பதில் கொடுக்கனும். இப்படி சில விஷயங்களை

அட்சய லக்ன பத்ததியில் ஆய்வு செய்கிறோம்.

பிரசன்னம் முறையில் ஆய்வு செய்கிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அட்சய லக்ன

பத்ததியின் மென்பொருளில் இந்த விஷயங்களை, கூட்டி உள்ளோம். மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/tQwoa9hmZQo