நம்முடைய இலக்கை சரியான நேரத்தில் அடைய

அனைவருக்கும் வணக்கம்.

 

ஏன் அட்சய லக்ன பத்ததி முறையை பார்க்கிறோம் என்பதை முதலில் பார்க்கலாம்.

நாம் வாழக்கூடிய இந்த கால கட்டத்தில் நாம் எதை நோக்கி பயணிக்க போகிறோம்,நாம் பயணம் செய்யக்கூடிய பாதைகள் எப்படி இருக்கும்,

நம்முடைய இலக்கை சரியான நேரத்தில் அடைய முடியுமா?

என்ற விஷயத்தை எல்லாம் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.

 

உதாரண ஜாதகம்

ஒருவருக்கு மேஷ லக்னம் அட்சய லக்னமாக இருந்தால்,அவருக்கு லக்னாதிபதி செவ்வாய் 2ம் இடத்தில் இருக்கார்.

அட்சய லக்ன பத்ததி முறையில் 10 வருடத்திற்கு ஒரு லக்னம் மாறும்.

இந்த மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் இருக்கிறார்.

இந்த 10 வருடமும் ஜாதகர் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்து தான் அவருடைய செயல்கள் எல்லாம் இருக்கும்.

அவர் என்ன செய்தாலும் குடும்ப நபர்களை வைத்து அவருடைய செயல்கள் எல்லாமே இருக்கும்.

 

இந்த 10 வருடம் முடிந்தபின் ரிஷப ALP லக்னம் வரும். ரிஷப ALP லக்னம் வரும்பொழுது அதன் அதிபதி சுக்ரன் அங்கேயே இருப்பார்.

செவ்வாய் அதே இடத்தில் தான் இருப்பார். இப்படி இருந்தால செவ்வாய் 7ம் அதிபதியாக போவார்.இது ஒரு ஆண் ஜாதகமாக இருந்தால் ரிஷப லக்னம் ALP லக்னம் போகும்பொழுது ஜாதகரை 7ம் பாவம்தான் இயக்கும்.அதாவது மனைவி, நண்பர்கள் ,கூட்டுத் தொழில் மூலமாக ஜாதகர் இயங்குவார்.

அதுவே ரிஷப லக்ன அதிபதி செவ்வாய் அங்கே இருந்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் இவரே பார்த்துக் கொள்வார்.

இந்த 10 வருடம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் அவருடைய சிந்தனைகள், செயல்கள் , எண்ணங்கள் எல்லாமே தன்னை சார்ந்திருக்கும்.

ஜாதகர் தனக்குத்தானே முடிவெடுத்துக் கொள்ளும் அளவிற்கு வருவார்.

 

ஒவ்வொரு லக்னம் மாறும்பொழுது லக்ன அதிபதிகள் உடைய தன்மைகேற்ப உங்களுடைய குணங்கள், அதனுடைய பலன்கள் ,அதனுடைய காரகத்துவங்கள் எல்லாமே மாறும் இந்த ALP நிருபணம்.

 

அடுத்து 10 வருடம் ALP லக்னம் மிதுனமாக போகும்பொழுது ,லக்னாதிபதி புதன் 12ல் இருந்தால் அப்போ மிதுன லக்னம் வரக்கூடிய 10 வருட கால கட்டங்கள் ஜாதகருடைய எண்ணங்கள் செயல்கள் விரயத்தை நோக்கியே பயணம் செய்யும்.

விரயம் என்பது வீண் விரயமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சுப விரயமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஏன்னா? புதன் இருக்கக்கூடிய டிகிரி பார்க்கணும், இல்லைனா எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்குனு பார்க்கணும்.

புதனுடைய தன்மை குணங்கள் சுபத்துவமாக இருக்கா என்பதை பார்க்கணும்.ஏன்னா?

புதன் லக்னத்திற்கும், 4-க்கும் அதிபதி.

பெரும்பாலும் மற்ற கிரகங்களோடு சேராமல் புதன் இருந்தால் சுப விரயங்கள் அவருக்கு அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

மிதுனலக்னம் ALP லக்னம் வந்து லக்னாதிபதி 12ம் வீட்டில் இருந்தால் அவருக்கு சுப விரயம் ஏற்படும்.

அவருடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாமே சொந்தமாக வீடு வாங்கணும் ,சொந்தமாக வாகனம் வாங்கணும் என்று எண்ணத்தோடுதான் அந்த விரயத்தை யோசிப்பார்.

 

இந்த மாதிரி தான் ஒவ்வொரு பாவகம் சார்ந்தும் ஒரு லக்னஅதிபதி ,ஒரு லக்னத்தை வைத்து மட்டுமே அடுத்தடுத்த கிரகங்கள் மாறும் பொழுது அந்த கிரகத்தின் உடைய பலன்கள் ,காரகத்துவங்களும், பாவகத்துவங்களும் மாறும் என்பதுதான் அட்சய லக்ன பத்ததிமுறை.

 

நன்றி.

திருப்பதி சென்று வந்தால் திருப்பம்

12 ராசிக்காரர்களும் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகுமா?

அப்படிதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் சில பேருக்கு மனதில் அழுத்தம் இருக்கும்.
கோயிலுக்கு போயிட்டு வந்து தான் பிரச்சனை,
கோயிலுக்கு போய் தான் நடந்தது,இதெல்லாம் உண்மைதான்.
நடக்கிறது.
ஆனால், சில கரும பயன்கள், சில விஷயங்கள் அனுபவித்து கரைத்து பிரச்சினைகளை முடித்து என்னுடைய மனதில் உள்ள அழுக்குகள், என்னுடைய உடலில் உள்ள அழுக்குகள், வெளி வந்தால்தான் அது முழுமை அடையும்.

என்னுடைய வெளி மனம் நான் அந்த கோவிலுக்கு போனேன் ,அந்த கோவிலுக்கு போனதால்தான் பிரச்சனை, விரயம் என்று சொல்வார்கள் ஆனால் ஏதோ ஒரு காரணம் உள்ளுக்குள் இருக்கும்.

ஆனால் சில ராசிகள் அங்கு போனால் உண்மையிலேயே பாதிப்பு உண்டு.
12 ராசிகளும் போய் அந்த கோவில் நடந்தால் அந்த நிகழ்வு எப்படி இருக்கும் என்றால் சில தவறுகள் செய்து இருப்பார்கள் இதற்கான தண்டனை இன்னும் உனக்கு ஆறு மாதம் இருக்கு அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.
என்பதுதான் கடவுள் சொல்ல கூடிய விதி.அப்பொழுதுதான் ஆரோக்கியமான நிகழ்வாக அமையும்.

தப்பு செய்துவிட்டு கோவிலுக்கு போகிறேன் ,அதை கடவுள் மன்னித்து விட்டால் நான் அடுத்த தப்புக்கு ரெடியாகி விடுவேன்.
ஏதோ ஒரு காரண காரியங்களோடு தொடர்புடையது தான் இந்த நிகழ்வு. கடவுளுக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை, ஆனால் நாம் கேட்க கூடிய முறை தவறாக இருக்கும். அதனால்,
சில நட்சத்திரங்கள் ,சில கிரகணங்கள், சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு.

உதாரணமாக ALP மிதுன லக்னத்தில் ஒருவர் இருக்கார்.
கண்டிப்பாக அவர் திருப்பதி போகலாமா? போகலாம்.
சிம்ம ராசி சிம்ம லக்னத்தில் ஒருவர் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்று நேராக அங்க போயிடுவாங்க.

அதேபோல் துலாம் ராசியில் ஒரு நடிகையோ, நடிகரோ இருந்தால் நீங்கள் திருப்பதி போயிட்டு வந்தால் ஒரு மாற்றம் கிடைக்கும்.
அதுவே ரிஷப ராசியில் போனால் கொஞ்சம் அழுத்தமாக இருக்கும்.
இது இரண்டுமே சுக்கிரன் ராசிகள்.
ஆனால் துலாம் ராசிக்கு இருக்கக்கூடிய யோகம் ரிஷப ராசிக்கு இருக்காது.

விருச்சிக ராசியில் போனால் அப்பொழுதுதான் வீடு வாங்கணும், சொத்து வாங்கணும்,என்னுடைய தொழில் பெரிதாக அமையனும் என்று வேண்டி கொண்டு போனாங்கனா அவங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கொடுத்து விடவும்.

நான் சந்தோஷமாக இருக்கணும் ஆனந்தமாக இருக்கணும் என்று வேண்டிக் கொண்டு போவார்கள். ALP தனுசு லக்னம் தனுசு ராசி,
அட்சய லக்னம் தனுசு லக்னம் போகும்போது திருப்பதி போய் கும்பிடுங்கள்,நினைத்தது எல்லாம் நடக்க ஆரம்பிக்கும்.

அதேபோல் மேஷ ராசி மேஷ லக்னம் ALP லக்னமாக வரும்போது
எதிர்பாராத சந்தோஷம் ,திருமணம் நடக்கவில்லை, குழந்தை,புகழ், அதிகாரம், யோகம், வேலை எல்லாம் கிடைத்துவிடும்.

மத்த ராசிகள்எல்லாம் தேவையில்லாத அழுத்தங்களையும், பிரச்சனைகளையும்,கழிக்கக்கூடிய காலமாக தான் அமையும்.
சில பேர் சொல்லுவாங்க அங்கு போகும் பொழுது கார், பஸ் பஞ்சர் ,
பஸ் கிடைக்கவில்லை , ரயில் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடிய நிகழ்வுகள் எல்லாம் நான் சொல்லாத இந்த ராசிகள் உள்ளவர்களுக்கு இது இருக்கும்.

மிருகசீரிஷம் 3, 4 பாதம், திருவாதிரை 1, 2, 3, புனர்பூசம் 1, 2, 3, இந்த நட்சத்திரக்காரர்கள் திருப்பதி ஏழுமலையானை பலமாக பிடித்துக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

கண்ணாடி முன் நின்று பேசி பாருங்கள், உங்கள் மனசாட்சி உங்களுடன் பேச ஆரம்பிக்கும்.அதுபோல் ஒரு நிகழ்வு, 6 மாதத்திற்கு முன் செய்த தவறை,
6மாதத்திற்கு பின்பு நான் புரிந்து கொள்வேன்.
அப்பொழுது என்னுடைய இந்த கர்ம கழிந்து விடும்.

இப்பொழுது ALP லக்னம் மிதுன லக்னம் வரும்பொழுது நேராக திருப்பதி ஏழுமலையான் பெருமாள் கோவிலை சரணாகதி அடைந்தால் உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ பேர், புகழ், பணம், அதிகாரம் எல்லாமே கொடுத்து விடுவார்.
கண்டிப்பாக யோகம் உண்டாகும்.