அரசியல் எப்படி இருக்கும் ஸ்டேட் /சென்ட்ரல் எது சிறப்பு

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒவ்வொரு நாளும் ஒரு ஜாதகத்தில் எந்த காலம் யோகமான காலம் என்பதை பார்க்கிறோம். ஒரு மனிதருக்கு நிறைய ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகள் வீடு வாங்கலாமா என்று ஆசைப்படுவது உங்களுடைய ஜாதகத்தில் வீடு வாங்க கூடிய அமைப்பு எப்பொழுது வருகிறதோ அப்பொழுது தான் உங்களுடைய மனம் உங்களுடைய ஆழ்மனம்,உங்களுடைய புத்தி, உங்களுடைய செயல்பாடுகள், உங்களுடைய எண்ணங்கள், அப்பொழுதுதான் பார்ப்பீங்க. உங்களுடைய ஜாதகத்தில் என்ன நடக்கப் போகிறதோ அதை முன்னடியே எண்ணங்களாக அல்லது உங்களுடைய ஆசைகளாக தூண்டப்படும். ஒருவர் வீடு வாங்கணும் என்று சொல்லிட்டே இருந்திருப்பாரு, ஆனால் ஜாதகத்தை எடுத்துட்டுபோயி நான் எப்ப சார் வீடு வாங்குவேன் என கேட்டுருக்க மாட்டாரு. ஆனால் அவருக்கு 2021 ல் வீடு வரணும் என்றால், சார் நான் வீடு வாங்கலாமா, என் வீடு எப்படி அமையும், எந்த திசையில் அமையும், அதற்கான தகுதியாக 10 லட்சம் முன்னாடியே சேர்த்து வைத்து இருப்பார் அல்லது அதற்கான தகுதி அவரது வருமானம் மூலமாகவோ, குடும்பத்திலோ ரெடியா இருக்கும். இதை உணருங்கள். இந்த இடத்தில் தான் நம்முடைய ஜாதகம் பலமாக வேலை செய்யும். உங்களுடைய செயல்கள் நடப்பதற்கு கிரகங்கள் ரெடியாக இருக்கு, அந்த கிரகங்கள் ரெடியான அப்புறம்தான் உங்களுடைய எண்ணங்கள் புத்தியாக மாறும். ஒருவர் கோர்ட் கேஸ் விஷயங்களுக்கு போகணும் என்றால் அப்பொழுது அவன் பேசிட்டான். அவளை அடிக்கணும் என்று கோபம் அதிகமாக வரும். அதே பேச்சு ஆறுமாதம் முன்னாடி சாதரணமாக நடந்த நிகழ்வு. ஆனால் பக்கத்தில் இருப்பவன் உன்னை இப்படி பேசி விட்டான் என்று இடையில் பேசி கோபத்தைத் தூண்டி விடுவார்கள். இதனால் கோர்ட் கேஸ், வம்பு, வழக்கு பிரச்சனைகள் ஏற்படும். கிரகங்கள் உடைய செயல்பாடுகளை பார்த்தீர்கள் என்றால், அதை உணர்ந்தால் கண்டிப்பாக அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை படிங்க எல்லாரும். வீட்டுக்கு ஒரு ஜோதிடர். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஜோதிடம் என்பதும், கிரகங்கள் என்பதும், 27 நட்சத்திரங்கள் என்பதும், 108 நட்சத்திர பாதங்கள் என்பதும் இன்றைக்கு எல்லாருக்கும் தெரிகிறது. அப்படி என்னதான் இருக்கு என்று அட்சய லக்ன பத்ததியில் படித்துப் பாருங்கள். ஒருவருடைய அன்றாட வாழ்க்கையில் நடக்க கூடிய செயல்களை கணிக்கமுடியும் னா அவ்வளவு நுண்ணியமாக துல்லியமாக கணிக்க வேண்டியதில்லை. சின்ன சின்ன விஷயங்களை பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, உங்களுடைய செயல்கள் நடப்பதற்கு முன்பாகவே உங்களுடைய மனதில் உங்களுடைய ஆழ்மனதில் ஒரு நிகழ்வை தூண்டும் அல்லது ஒரு எண்ணங்களை செயல்களை ஏற்படுத்தி அதை வாங்க வைக்கும். நன்றி.

#ALP_Astrology_newmethod

#alp_astrology_method_book

#ALP_astrology_classes

#alp_astrology_classes_moorthy

#ALP_astrology_contact_Alpnumber_9786556156

https://youtu.be/sVtFE70O7Hk

குரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும் ?

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். பண்டைய காலத்தில் ஜோதிடம் பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு பொருளை தானமாகக் கொடுத்துதான் ஜாதகம் பார்ப்பார்கள். அந்தக் காலத்தில் வெற்றிலை பாக்கு வாங்கி வந்துதான் ஜாதகம் பார்ப்பார்கள். அதன் பிறகு அரிசி, நெல், மிளகாய் இப்படி ஏதாவது ஒரு பொருளை தானமாக கொடுப்பார்கள். நமது வாழ்க்கையில் வழிகாட்டக்கூடிய ஜோதிடர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை தானமாகக் கொடுக்க வேண்டும். உணவு வாங்கி கொடுக்கலாம். துணி வாங்கி கொடுக்கலாம். அல்லது யாராவது ஒரு குருமார்களையோ, அந்தணர்களையோ,அல்லது வாழ்க்கையில் வழிகாட்டக்கூடிய நமது ஆசிரியர்களையோ, இல்லை நமக்கு ஜாதகம் பார்க்கும் நமது வாழ்க்கையை வழிகாட்டக்கூடிய ஜோதிடர்களுக்கும், கரும்பு சாருடைய தானம்,இனிப்பு தானம் கொடுக்கலாம். ஒரு ஜோதிடருக்கு நீங்கள் கரும்புசாறு தானம் கொடுத்தீர்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கையில் அந்த குரு தோஷம் நீங்கும். குரு தோஷம் என்று சொல்லக்கூடிய வீட்டில் குழந்தை இல்லை, குழந்தை நன்றாக படிக்கவில்லை, குழந்தை பிரச்சனை இருக்கு, எதிர்பார்த்த யோகம் கிடையாது இப்படியெல்லாம் இருக்கக்கூடிய வீட்டில் ஏதாவது ஒரு வகையில் குரு உடைய சாபம் அதாவது சொல்வதை கேட்காதவர்கள். அதாவது உதாரணமாக நான் ஜோதிடம் சொல்லி கொடுக்கிறேன் அது புரியாதவர்கள்,அதாவது குருவை பலிப்பவர்கள், ஜோதிடர்களை பலிப்பவர்கள், மறைமுகமாக திட்டுபவர்கள், அல்லது குருமார்கள் சொல்லிக் கொடுப்பதை இன்னொருவருக்கு மறைமுகமாக சொல்லி கொடுத்து ஒரு பொருளைத் தானமாகப் பெறுவார்கள். சொல்லிக் கொடுப்பது ஒரு குருவிடம் கற்ற வித்தையை, கல்வியை அவருடைய அனுமதியுடன் கற்றுக் கொடுக்க வேண்டும். அதுதான் முறையான கல்வி. இன்னாரிடமிருந்து இந்த கல்வி வந்தது, இன்னாரிடமிருந்து இந்த கல்வியை கற்றுக்கொண்டேன். இந்த கல்வியை அவரிடம் அனுமதி பெற்று நான் கற்றுக் கொடுக்கிறேன். அப்படி சொல்லிக் கொடுக்கும் பொழுது அந்த குரு உடைய தோஷம் வராது. அது இல்லாமல் மறைமுகமாக சொல்லிக் கொடுத்து ஒரு ஜோதிடர் இன்னொரு ஜோதிடருக்கு சொல்லிக் கொடுக்கும் பொழுது குரு உடைய தோஷம் கண்டிப்பாக உண்டாகும். கண்டிப்பாக அவருடைய வாழ்க்கையில் குடும்பம் என்று சொல்லக்கூடிய, அட்சய லக்னத்திற்கு 6, 8 ,10 ,12 ல் குரு பகவான் இருக்கக்கூடிய காலகட்டங்களில் குருமாருடைய சாபத்தை பெறக்கூடிய ஜாதகராக மாறுவார். குருவிடம் கற்ற கல்வியை யாருக்காவது மறைமுகமாக சொல்லி கொடுப்பார். மறைமுகமாக சொல்லி கொடுத்து பணத்தை பெறுவார். பேர் புகழ் வாங்குவார்கள். இது ஏதோ ஒரு விதத்தில் சாபத்தை ஏற்படுத்தும். உண்மையில் குரு சரியாக சொல்லிக் கொடுப்பார். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் குருவை பலிப்பது, மறைமுகமாக திட்டுவது, ஏதாவது ஒரு பழிச்சொல்லுக்கு ஆளாவது, இதெல்லாம் எப்படி தெரிந்து கொள்வது என்றால்? அந்த குடும்பத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட குறைபாடு இருக்கும், குரு என்றால் குழந்தைகள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஒருவர் செல்ல முடியவில்லை என்றால் அவருக்கு குரு உடைய தோஷம் இருக்கு. தோஷம் என்று சொல்லுவது ஜாதகத்தில் குரு 6, 8, 10, 12ல் இருந்தால் வீட்டிற்கு பக்கத்தில் குடமுழுக்கு நடக்கும் அதற்கு செல்ல முடியாது. மறைமுகமாகச் சாடினாலும் கண்டிப்பாக குரு தோஷம் ஏற்படும். அப்பாவுக்கும் மகனுக்கும் ஏற்படக் கூடிய பாக்கியம் எதிர்பார்த்த யோகம் கிடையாது. அதனால் கண்டிப்பாக கரும்புசாறு வாங்கி தானம் கொடுங்கள். ஏதாவது ஒரு குருவை சாந்த படுத்துங்கள். உங்களுக்கு யாரெல்லாம் வழிகாட்டுகிறார்கள் அவர்களுக்கு கரும்புசாறு வாங்கி கொடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும். இல்லையென்றால் சிவன் கோவிலுக்கு கரும்புசாறு வாங்கி அபிஷேகம் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும். அபிஷேகம் செய்த கரும்புசாறு வாங்க அருந்தும் போது இன்னும் சந்தோஷம். உங்களுடைய வாழ்க்கை நிவர்த்தியாகும். அதன் பிறகு பணம், தனம், மகிழ்ச்சி, குடும்ப உறவுகள், குழந்தைகளுடைய படிப்பு, குழந்தைகளுடைய ஆரோக்கியம், குழந்தைகளுடைய செல்வம், மகிழ்ச்சி, ஆனந்தம், எல்லாம் அந்த வீட்டில் கண்டிப்பாக வாழ்க்கை வளமாகும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/Wwy0QOjwXPM

உணவு சம்மந்தபட்ட விசயங்களில் மிக மிக கவனம் தேவை

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். குழந்தையின்மை என்ற கேள்வி இன்று மக்கள் பெரும்பாலும் ஜாதகம் பார்க்கிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வில்லை என்பதுதான். உடலையும் மனதையும் கெடுத்து நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோஷம் ஆரோக்கியம் மறந்து ஏதோ ஒரு இயந்திர வாழ்க்கையில் பயணிக்கிறோம். பெண்கள் கோலம் ஏன் போடுகிறார்கள் என்றால் குனிந்து கோலம் போடுவதால் கர்ப்பப்பை அதனுடைய தன்மையை பாதுகாக்கும். குழந்தை இல்லை என்றால் கண்டிப்பாக பெண்கள் கோலம் போட வேண்டும். காலையில் எழுந்து கோலம் போடும் பொழுது உடல் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். குழந்தை இல்லை என்ற விஷயத்திற்கு குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். 5ம் வீடு குழந்தை. 5ம் வீடு முக்கியமாக இருக்க வேண்டும். குருபகவான் முக்கியமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக அந்த வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான நிலை உண்டு. ஆனால் அட்சய லக்னத்தில் 5ம் பாவக நட்சத்திர புள்ளியும், 5ம் பாவக அதிபதியும் எங்கு இருக்கு என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக குரு பகவான் நீசம் ஆனால் குழந்தைகள் மூலமாக தொந்தரவு வரும். குழந்தைகள் மூலமாக ஒரு யோகத்தைக் கொடுக்க முடியாது. கண்டிப்பாக குரு பகவான் பலமாக அமைந்தால்தான் வாழ்க்கையில் வழிகாட்டுதல் யோகமாக அமையும். குரு நீசமானால், குரு 6 ,8 , 10, 12 ல் இருந்தால் கண்டிப்பாக யோகத்தை கொடுக்காது. குருபகவான் நீசமானால் சொல்வதை கேட்க மாட்டார்கள். நன்றி.

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/SFRcGG0GTTQ

வேலை உண்டு

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு நாளும் ஒரு ஜாதகத்தில் எந்த காலகட்டம் யோகமான காலகட்டம் என்பதை பார்க்கிறோம். நம்முடைய பிறப்பு லக்னத்திற்கு நம்முடைய உடல், மனம் எவ்வாறு வளர்ச்சி பெறுகிறதோ அதே போல் நம்முடைய ஜென்ம லக்னத்தில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு 10 வருடத்திற்கும் லக்னத்தை மாற்றி பலன் சொல்லும்பொழுது உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை நிகழ்வுகளும் யோகத்தை கொடுக்கும். இந்த காலகட்டத்தில் இது செய்யலாம். இந்த காலகட்டத்தில் இது செய்யக்கூடாது. 108 நட்சத்திர பாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் கடந்து செல்லக்கூடிய யோகத்தை பெறக்கூடிய அமைப்பு நம்மிடம் உள்ளது. 1 நட்சத்திரபாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும். 108 நட்சத்திர பாதம் ஒரே மாதிரியாகத்தான் இருக்குமா? இருக்காது. ஒருவருடைய ஜென்ம லக்னத்தின் லக்ன புள்ளி ஒருவருக்கு மேஷ லக்னமாக ஜென்ம லக்னம் இருந்தால் அவர்கள் அஸ்வினி 1லும் பிறக்கலாம், கார்த்திகை 1 லும் பிறக்கலாம். ஆனால் இரண்டு பேருக்கும் 10 வருடம் ஏற்காது ஒருவருக்கு பத்து வருடம் இயக்கலாம். ஒருவருக்கு ஒரு மாதம் இயக்கலாம். மேஷ லக்னத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான பலன் இருக்காது. அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை அடிப்படை தெரிந்த அத்தனை பேரும் கற்றுக்கொள்ள முடியும். மேஷ லக்னம் ஜென்ம லக்னமாக இருந்து இன்றைக்கு வயது 40 அவருக்கு கடக லக்னம் செல்லும். 3 வயது குழந்தைக்கு 30 வயது மனிதருக்கும் வித்தியாசம் இருக்கும். அதுதான் ஜாதகம் அதுதான் யோகம். உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை நிகழ்வுகளும் மாறிக்கொண்டே இருக்கும். எல்லாவற்றிற்கும் காரணம் உங்களுடைய லக்ன புள்ளி. நன்றி, வணக்கம்.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/T22b-yoFYXI

செவ்வாய் தோஷம்

அனைவருக்கும் வணக்கம், இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையில் எந்த காலம் யோகமான காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடமுறையில் ஜென்ம லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆனால் ALP லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12 ல் இன்றைய லக்னத்திற்கு, இன்றைய வயதுடைய லக்னத்திற்கு, நகரும் லக்னத்திற்கு 1, 2, 4, 7 ,8 , 12ல் செவ்வாய் இருந்தால் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது. உடல் உபாதைகள் எண்ணங்களை மாற்றிக் கொடுக்கும். வேகம், கோபம், அவர்களுடைய தாக்கங்கள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். செவ்வாய் என்பது இரத்தம், அதனால் இரத்தம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக தூண்டப்படும் பொழுது ஜாதகருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும். சிம்ம லக்னத்திற்கு 4ம் ஆதிபத்தியம் பெறக்கூடிய செவ்வாய், சிம்ம லக்னம் ALP ஆக போகும் பொழுது 9ம் அதிபதியும் செவ்வாய் ஆக வரும். இந்த செவ்வாய் 1, 2, 4 ,7, 8, 12ல் இருந்தால் தாய், தந்தை மூலமாகவே ஜாதகருக்கு திருமணம் தடையாக இருக்கும். அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது 100% கண்டிப்பாக பலன் சொல்ல முடியும். மணமகன் மணமகள் யாராவது ஒருவருக்கு பொருத்தம் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் வழிகாட்ட முடியும். ஜென்ம லக்னம் என்பது நான் பிறக்கும் போது உள்ள லக்னம். ஆனால் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இன்றைய லக்னம் தான் பார்க்க வேண்டும். பிறக்கும்போது உள்ள மனம், உடல்,….. எல்லாமே நாம் வளர வளர மாறும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் நான் சொல்வது. 28 வயதில் நம்முடைய புத்தி, நம்முடைய மனம், உடல், எல்லாமே வளர்ந்திருக்கும். அதை தான் பார்க்க வேண்டும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை. நன்றி, வணக்கம்.

https://youtu.be/026Yf4qz-sU