பங்குசந்தையில் ஈடுபடலாமா…?

அனைவருக்கும் வணக்கம், இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆராய்ச்சியாளர். பங்குச்சந்தையில் ஈடுபடலாமா? பங்குச்சந்தை என்பது ஒரு பலமான நிகழ்வு. ஏன்னா ? ஒவ்வொரு ஜாதகத்திலும் ஆச்சரியமான ஒரு கடல் அளவு இருக்கக்கூடிய நிகழ்வுகளை நாம் கையாளக்கூடிய, கடல் தண்ணியை அள்ளுவது போல் தான் இந்த பங்குச்சந்தை. இது மதி மயக்கக் கூடிய அமைப்பு. ஐந்தாம் வீடு என்பது மனம் புத்தி, ALP லக்னத்திற்கு 5ல் இருக்கக்கூடிய கிரகம் சனி, சந்திரன், ராகு தொடர்பு இருக்கக்கூடாது. இருந்தால் கண்டிப்பாக அந்த ஜாதகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இது தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பங்குச்சந்தையில் ஒரு மில்லி அளவில் மாறுபாடு அடைந்தாலும் கண்டுபிடிக்க முடியும். கண்டாந்திரி தோஷம் என்பது ஒரு கண்டம் விட்டு மற்றொரு கண்டம் மாறுதல். இந்தப் பகுதியில் நான் ஆய்வு செய்துள்ளேன். அதாவது இந்தியாவின் ஜாதகம் என்ன, பங்குச்சந்தை ஜாதகம் என்ன, வங்கி ஜாதகம் என்ன, தமிழ்நாடு ஜாதகம் என்ன, இந்த மாதிரி நான்கு விதமான ஜாதகங்களை ஆய்வு செய்து ஒரு நிமிடத்தில் எந்த கிரகம் ஏறும் எந்த கிரகம் இறங்கும் என்பதை கூற முடியும். இடத்திற்கு ஏற்றார்போல் அவருடைய ஜாதகமும் ,வாங்கும் இடமும் ஏற்புடையது. பங்குச்சந்தையில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஆய்வு செய்ய முடியும். தசாபுத்தி என்பதை இப்படி பிரித்துள்ளேன். அட்சய லக்கனத்துடைய லக்கன புள்ளியை 54 பிரிவுகளாகப் பிரித்து, அதை 65 பிரிவுகளாகப் பிரிக்கும் பொழுது, 1 நிமிடம் 29 வினாடிக்கு லக்னபுள்ளி மாறிக்கொண்டே இருக்கும். 1 நிமிடம் 29 விநாடிக்கு லக்கன புள்ளி மாறும் பொழுது அதனுடைய தன்மைகளும் மாறும். ALP.Astrology என்ற மென்பொருள் goole Playstore ல் உள்ளது. அதில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். நன்றி ,வணக்கம்.

https://youtu.be/3yy4i_8cy60

2021 & 2024 யோகமான காலம்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய பாவகம்: ஒரு நட்சத்திர புள்ளி 405 நாள் இயக்கும். 405 நாள் ஒரு நட்சத்திர பாதம் மட்டும் இயங்காது. உப நட்சத்திரங்கள் அல்லது தசாபுத்திகள் என்று பிரித்து இருக்கிறோம். ஒரு நட்சத்திர பாதம் 45 நாள் இயங்கும் அந்த 45 நாள் 5 நாள் இயங்கும். 5 நாள் 13 மணி நேரம் 20 நிமிடம் இயங்கும். 13 மணி நேரம் 20 நிமிடம் 1 மணிநேரம் 30 நிமிடம் இயங்கும். 1 மணிநேரம் 30 நிமிடம் 10 நிமிடமாக இயங்கும். இப்படி தான் 12 பாவகமும் பிரித்து இருக்கிறோம். ஒவ்வொரு பாவகத்திற்கும் கிரகங்கள் மாறும்பொழுது துல்லியமாக பலன் எடுக்க முடியும். அட்சய ராசி என்பது தசாபுத்திகள் அடிப்படையில் எடுக்கிறோம். அட்சய பாவகம் என்பது ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 12 பாவகங்களாக பிரிக்கும் பொழுது 33 நாள் 18 மணி நேரம் தொடர்புடைய பாவகத்தை இயக்கும். அட்சய பாவகம் இன்றைக்கு எந்த பாவகத்தில் இருக்கிறதோ ஒவ்வொரு 33 நாளுக்கும் மாறிக்கொண்டு இருக்கும். நாம் நட்சத்திரங்கள் வழியாகவும் கிரகங்களை பிரித்து இருக்கிறோம். ராசியில் சந்திரன் உடைய தன்மைகளையும் பாவகமாக எடுத்து இருக்கிறோம். பாவகங்கள் வழியாக பிரிக்கும் பொழுது நட்சத்திரங்கள், கிரகங்கள், பாவகங்கள் இந்த மூன்றும் தனித்தனியாக ஒரே நேரத்தில் பார்க்கும் பொழுது இன்னும் எளிமையாக புரியும். பாவகங்களில் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் செல்லும்பொழுது மிக மிக எளிமையாக சொல்ல முடியும். நன்றி, வணக்கம்..

https://youtu.be/rYw4x-xKEAQ

செக்கு இருந்த இடத்தில் வீடு கட்டலாமா

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். கேள்வி ஊரில் செக்கு இருந்த இடத்தை வாங்கக்கூடாது என்கிறார்கள். ஏன் இது வாங்கக் கூடாதா? வாங்கலாமா? ஊரில் செக்கு இருந்த இடத்தை யாரும் வாங்க மாட்டார்கள். குறிப்பிட்ட ஒரு சில நபர்கள் தான் வாங்குவார்கள். செக்கு இருந்த இடத்தில் வீடு கட்டினால், செக்கு சுழலும் கஷ்டப்படும் அந்த மாதிரி இடத்தில் வீடு கட்டினால் ஒரு சந்தோஷமான நிலையை குறிக்காது. அதை வாங்க மாட்டார்கள். அந்த இடத்தில் வீடு கட்டமாட்டார்கள். செக்கு இந்த இடத்தில் இருந்தது, இந்த இடத்தில் இல்லை என்று தெரிந்துகொள்ள அந்த நிலத்தை சுற்றி சுத்தி செய்ய வேண்டும். சுத்தி என்பது மண்ணில் இருக்கக்கூடிய சல்லிய தோஷத்தை நீக்குவது. அந்தக் காலத்தில் நவதானியங்களை தெளித்து விட்டு உழுவார்கள். சிலபேர் அந்த இடத்தில் மாடு கட்டிமையாக்குவார்கள். அதுபோல் செய்து வந்த இடத்தை சுத்தி செய்வார்கள். சுத்தி என்பது அந்த இடத்தை சமநிலைப்படுத்துவது சாந்தப்படுத்துவது,அந்த இடத்தை சுத்தப்படுத்துவது. இன்றைக்கு நாம் அவசர உலகத்தில் இருக்கிறோம். அந்த இடத்தை சுற்றி எலும்புகூடோ அல்லது புதைகுழியோ ஏதாவது ஒரு பிரச்சனை அந்த இடத்தில் இருந்தால் ALP க்கு 4ம் இடத்தில் ராகு சம்பந்தப்பட்டு இருந்தால் கண்டிப்பாக வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். இதை அட்சய லக்ன பத்ததி ஜோதிட மென்பொருளில் இரண்டு பகுதியாகப் பிரித்து உள்ளேன். வீடு சம்பந்தப்பட்ட கேள்வி என்றால் 4ம் பாவகத்திற்கு மேல் சிகப்பு கலர் இருக்கா? 4ம் பாவகத்திற்கு கீழ் சிகப்பு கலர் இருக்கா? 4ம் பாவகத்திற்கு கீழ் சிகப்பு கலர் இருந்தால் அந்த வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட குறைபாடு இருக்கும். வாஸ்து சம்பந்தப்பட்ட நிபுணர்களை அழைத்து சரி செய்யணும். ஜாதகருக்கு நேரம் நன்றாக இருக்கும்பொழுது வாஸ்து சம்பந்தப்பட்ட நிபுணர்களை அழைத்து சரியான வழிகாட்டுதல் கொடுப்பாங்க. ஜாதகம் ,தசா புத்தி நன்றாக இருந்தால் இதை மாற்றி வையுங்கள் என்று சொன்னால் உடனே மாற்றுவார்கள். அதில் ஒரு மாற்றம் உண்டாகும் அந்த மாற்றத்தை பிடித்து ஏணிப்படியாக அந்த ஜாதகர் முன்னேறுவார். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அதனால் மனை என்பது மிக மிக பார்த்து சதுரமாக இருக்கிறதா, செவ்வகமாக இருக்கிறதா, நீள் வடிவமா,வடக்கும் தெற்கும் அருங்கோணம் ஆக இருக்கா, ரொம்ப ரொம்ப கவனமாக பார்க்கணும். கண்டிப்பாக மனை பார்க்கும்பொழுது நல்ல ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் நிலத்தில் தோஷம் இல்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய மற்ற பொருள்கள் மீது இருக்கும். பொருள்கள் மீது இருக்கும் தோஷம் மற்றொருவரிடம் தானமாக கொடுக்கும் பொழுது அதன் பிறகு அந்த ஜாதகர் சந்தோஷமாக இருப்பார். கண்டிப்பாக இதை உணரவேண்டும் உணரக் கூடிய அமைப்பு உள்ளது. உங்கள் ஜாதகத்தில் இப்படி அமைப்பு இருந்தால் அதை நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை கண்டிப்பாக எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். Alp Astology வீடியோஸ் நிறைய உள்ளது. பாருங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் உருவாக வேண்டும். நன்றி.

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_number_9786556156

https://youtu.be/Mw-8lbxUXu4

அரசு வேலை உண்டு

அரசு வேலை உண்டு

அனைவருக்கும் வணக்கம் இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும் நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். பரிகாரம் செய்தால் நம்முடைய வாழ்க்கை மாறும். பரிகாரம் எல்லாம் செய்யலாம் ஆனால் உழைப்பும் முயற்ச்சியும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும். பத்தாயிரம் வாங்காமல் பத்தாயிரம் சம்பாதிக்க வழி சொல்லிக் கொடுங்கள். மீன் பிடிப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும். காலத்தை அறிந்து உணர்வதுதான் ஜோதிடம். யாருக்கு என்ன நேரத்தில் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். காலம் அறிந்து செயல்பட வேண்டும். உடனே எதுவும் நடக்காது இது எல்லாவற்றிற்கும் நம்முடைய உழைப்பும் முயற்சியும் தேவை. முயற்சி பயிற்சி நம்முடைய முன்னேற்றத்திற்கான வழி. இன்றைக்கு வெற்றியாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கஷ்டப்பட்டவர்கள் தான். அவர்களுடைய முயற்சியும் பட்ட கஷ்டமும் பார்த்தால் மிக மிக அதிகமாக இருக்கும். ஜாதகத்தில் பரிகாரம் என்பது எந்த நேரத்தில் செய்தால் நல்லா இருக்குமோ அந்த நேரத்தில் செய்தால் தான் பலிக்கும். அவருக்கு அந்த வெற்றி கிடைக்குமா? அல்லது வெற்றி கிடைக்கக் கூடிய அமைப்பு உள்ளதா? இரண்டு வருடம் அமைதியாக தான் இருக்க வேண்டும் என்றால் இருந்துதான் ஆகவேண்டும். ஜாதகத்துடைய அமைப்பு தான் இது. நன்றி.

அட்சய லக்ன பத்ததி பாகம் 1 pdf

அட்சய லக்ன பத்ததி பாகம் 3

அட்சய லக்ன பத்ததி பாகம் 2

அட்சய லக்னம் பத்ததி ஜோதிடம்

ஜோதிடம்

அட்சய லக்ன பத்ததி புத்தகம்

https://youtu.be/o6VnVKGctWo

அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம் (முக பாவனை)

முக பாவனை ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியத்துவம்,
அதனுடைய உட்கூறுகள் என்ன,
என்பதை அமெரிக்காவை சார்ந்த பால் ஹெல்ப் மேன் என்ற மன இயல் அறிஞர், உளவியல் அறிஞர் என்ன பண்றாருனா இதைப்பற்றிய உடல் கூறுகள்,
நம்முடைய புன்னகைக்கும், நம்முடைய உடல் அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும்
எவ்வளவு ஒத்துப் போகிறது.

அதாவது உடல் அசைவுகளுக்கும் புன்னகைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது?
பொய்யா சிரிக்கிறார்களா,
இல்லை ஆழ்மனதிலிருந்து ஆழ்ந்து சிரிக்கிறார்களா,
இல்லை முகத்திற்கும் அந்த சிரிப்பிற்கும் ஒத்துப் போகிறதா,
என்று சொல்லி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முக பாவனைகளை ஆய்வு செய்கிறார்.

உணர்ச்சியே அட்லஸ் என்ற வார்த்தையை அவர் குறிக்கிறார்.
அது சம்பந்தப்பட்ட ஆய்வுகளை முன்னோடியாகத் திகழ கூடிய
பால் ஹெல்ப் மேன் என்பவர் புன்னகை உடைய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்
அது எதார்த்தமான தோற்றத்தைக் குறிக்கணும் ,எதார்த்தமாக உருவாகணும்,
பொய்யாக சிரிக்கும் பொழுது உடல் மொழி எப்படி இருக்கு என்பதை ஆய்வு செய்திருக்கிறார்.
அதை பற்றிதான் இன்று பேசப் போகிறோம்.

நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் நோய் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கட்டும்,
கடன் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும்,
எல்லாம் பிரச்சனைகளாக பேசும் பொழுது அது எந்த அளவிற்கு யோகம் கொடுக்கும் என்பது தெரியவில்லை.
ஆனால் இதற்கெல்லாம் ஒரு மருந்து நம்முடைய ஆழ்ந்த சிரிப்பு.
அதுதான் புன்னகை.
அதாவது நம்முடைய ஆழ்மனதில் இருந்து எதார்த்தமாக சிரிப்பது.

ஒருவர் நகைச்சுவை சொல்லும்பொழுது அதில் சிரிப்பு இருக்காது ஆனால் அவருக்காக நாம் சிரிக்கணும்,

அதாவது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும்னா வெளியில் வாய் சிரிப்பு தோற்றத்தை காமிக்குமே தவிர மனதில் சிரிப்பு இருக்காது.

ஆழ்ந்த சிரிப்பு இருக்கும்பொழுது கண்டிப்பாக நோய்களுக்கு மருந்தாகும்.

நம்முடைய வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு நகைச்சுவை பார்க்கும் பொழுது தன்னை அறியாமல் சிரிப்போம்.
ஏதாவது ஒரு நகைச்சுவை பார்த்திருப்போம், ஏதாவது ஒரு மொழியை கேட்டிருப்போம்,
சின்ன குழந்தை ஏதாவது ஒரு விஷயம் பேசி இருக்கும், இல்லை சிரித்திருக்கும்
குழந்தைகளின் சிரிப்பு பார்க்கும்பொழுது ஆனந்தம் வரும் பாருங்கள் அதுதான் புன்னகை.

அந்தப் புன்னகை தான் நம்முடைய வாழ்க்கையில் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.

உதாரணமாக நம் கண்ணாடி முன் நின்று சிரித்து பாருங்கள்,
அது பொய்யான சிரிப்பாக இருக்கும்.

இதுவே ஒரு நகைச்சுவை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது எதார்த்தமாக சிரிப்போம்,
நாலு பேர் இருக்கும்போது சிரிக்க மாட்டோம்,
இதுவே எங்காவது தனியாக இருக்கும் பொழுது நகைச்சுவை பார்த்தால் நம்மை அறியாமல் சிரிப்போம்.
நம்மை அறியாமல் இந்தப் புற சூழ்நிலைகள்,
அதுதான் இந்த மனிதர்களுடைய சிரிப்பு அலைகளை கட்டுப்படுத்தும்.

உங்கள் வாழ்க்கையில் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு நாள், அந்த நாளில் இன்றைக்கு யாரைப் பார்த்தாலும் சந்தோஷமாக சிரிக்கணும், வணங்கனும், நன்றி சொல்லனும், வாழ்த்துக்கள் சொல்லணும், என்று காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் பார்க்கும் பொழுதெல்லாம் சிரியுங்கள்.
உங்களை கேள்வி கேட்டு இருப்பாங்க,
உங்களை கோபப்படுத்தி இருப்பாங்க,
உங்களைப் புகழ்ந்து இருப்பாங்க,
எல்லாவற்றிற்கும் உங்களுடைய மருந்து, உங்களுடைய விடை சிரிப்பாக இருக்கட்டும்.
அந்த ஒரு நாள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். அப்படி ஒரு நாள் இருந்து பாருங்கள்.

அன்றைய இரவில் உங்கள் மனம் ஒரு 100 சதவீதம் ஒரு ஆழ்ந்த உறக்கமும், ஒரு ஆழ்ந்த சந்தோஷமும், என்றைக்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும்.

தொல்காப்பியர் 8 வகைப்பாடுகள் வகைபடுத்தி உள்ளார்.
தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நகைச்சுவை,சந்தோஷம், இன்பம் இப்படி நிறைய
வகைபடுத்தக் கூடியதில்,
முதலில் சொல்லக்கூடிய உணர்வாக நகைச்சுவையை தான் சொல்கிறார்.
சிரிப்பை தான் சொல்கிறார்.

அதனால் நம்முடைய வாழ்க்கையில்
சிரிப்புதான் அடுத்தகட்ட இலக்கை நோக்கி பயணிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக மாறும் என்பதை நமக்கு புரியவைக்கிறார்.

நம்முடைய மூளை ஒரு எதார்த்தமான சிரிப்பிற்க்கும், பொய்யான சிரிப்பிற்க்கும் இந்த இரண்டு வகையான சிரிப்புகளை,
மூளை எளிமையாக புரிந்துகொள்ளும்.

நாம் எதார்த்தமாக சொல்வோம். இது உண்மையாக சிரிக்கிறோம், இது போலியாக சிரிக்கிறோம் என்று ஆனால், இந்த மூளைக்கு போலியான சிரிப்புகளையும் உணர கூடிய தன்மை உள்ளது.

நம் உடலில் இருக்கக்கூடிய தசைநார்கள்
ஒரு இறுக்கமாக இருக்கு, இல்லை இருக்க மற்று இருக்கு,
உதாரணமாக கை, கால், இல்லை நம் மூளையின் பின்பகுதியில் தசைநார்கள் இருக்கமாக இருந்தால் எதார்த்தமான சிரிப்பு வராது.

அதேபோல் தசைநார்கள் இறுக்கமற்று இருக்கும்பொழுது அந்த உணர்வுகள் சந்தோஷமான சிரிப்பு, ஆழ்ந்த சிரிப்பு எதார்த்தமாக வரும் அந்த சிரிப்பு.

இந்த மாதிரி இருக்கும் பொழுது யாருக்கு அந்த அமைப்பு வரும் என்றால் நாம் கிரக ரீதியாக பார்க்கணும்,
சந்திரன் என்ற கிரகமும்,
சுக்கிரன் என்ற கிரகமும்,
இது பலமாக இருக்கணும்.

இந்த இரண்டு கிரகங்களும் குருவோட தன்மைகளாக எப்படி இருக்கும் என்பதை பொறுத்தி பார்க்கும் பொழுது தான் நம் மூளையினுடைய செயல்பாடுகளுக்கும்,
நம் தசைநார் உடைய செயல்பாடுகளுக்கும்,
நாம் விளக்கத்தை காணமுடியும்.

இல்லை சார் , சந்திரன் சுக்கிரனுக்கு 6,8 ஆக இருக்கு, சந்திரனுக்கும், குருவுக்கும் சஷ்டாஷ்டகமாக இருக்கு என்றால் அதனுடைய தசைநார்கள் எப்போதும் ஒரு இறுக்கத்தை கொடுக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த உணர்வுகள் மாறும் பொழுது கோட்சார கிரகங்கள் வைத்தும் நாம் பலன் சொல்லலாம்.

கண்டிப்பாக சந்திரன் சுக்கிரன் இருக்கும்பொழுது அந்த தசை நார்கள் ஒரு யோகமான ஒரு ஆனந்தமான சிரிப்பு வரும்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் நல் சூல்நிலையில் அதாவது 1,5,11 ல் தொடர்பு இருக்கும் பொழுது ஒரு சுப கிரகங்களாக இருந்து தொடர்பாக இருந்தால், இப்பொழுது சந்திரன் சுக்கிரன் பலமாக இருந்து அந்த கிரகங்கள் தொடர்புகள் இருந்தால் எதார்த்தமாக சிரிப்பு வரும்.
ஒரு நிமிடத்தில் வரலாம் இல்லை ஒருநாளில் வரலாம் இல்லை எதுவுமே இல்லாமல் ஒருவர் சந்தோஷமாக இருப்பார்.அதுபோல்தான் நிறைய பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆழ்ந்து சிரிப்பார்கள்.

கேங்கேயம் என்ற ஒரு பகுதி மூளையினுடைய கீழ்ப்பகுதியில் இருக்கக்கூடியது. ஒரு எதார்த்தமான ஆனந்து சிரிப்பை கொடுக்கும்.இந்த ஆழ்ந்த சிரிப்பு எப்பொழுது வரும் என்றால் ஏதாவது ஒரு நண்பர் நீண்டநாள் பிறகு பார்க்கிறோம் ,அந்த சந்தோஷம் அவ்வுளவு ஆனந்தமாக இருக்கும்.அப்பொழுது நம் மூளையின் உடைய பின்பகுதியில் இந்த உணர்ச்சிகள் உடைய பகுதிகளாக தூண்ட ஆரம்பிக்கும்.
அதுதான் இம்படிக் என்று ஒரு உணர்ச்சி செல்லை தூண்டும்.
இந்த உணர்ச்சி செல் நேராக கேங்லியாவை தொடும். அதை தொட்டவுடன் ஒரு ஆனந்தமான சிரிப்பு தோன்றும்,
நம் நண்பர்கள், நமக்குப் பிரியமானவர்கள்,காதல் வயப்படக் கூடிய ஆண் பெண் சந்திக்கக்கூடிய இடத்தில் அப்படி ஒரு எதார்த்தமான விஷயம் வரும்.அப்பொழுதுதான் உணர்ச்சி அலைகள் ஆனந்தமாக எதார்த்தமாக வரும்.

அதுவே நமக்கு பிடிக்காத நபர்களை ஒரு இடத்தில் பார்க்கும் பொழுது அந்த உணர்வு அந்த உணர்ச்சி அந்த இடத்தில் தோன்றுவதில்லை.

அதேபோல் ஒவ்வொரு காலகட்டமும் வயதுக்குத் தகுந்தாற்போல் காலத்திற்கு தகுந்தாற்போல் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நம்முடைய மொத்த வயதினரை பார்க்கும் பொழுது இந்த ஆனந்தமான சிரிப்பு 60 வயது.அப்பொழுது அந்தக் கருத்துகள் ஒத்துப்போகும்.

60 வயதான நபருக்கும், 20 வயது பையனுக்கும் ஒரு பொருத்தம் இருக்காது. ஏன்னா? இந்த உடல் மொழிகள் ஒத்து போகாது.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இந்த சிரிப்பு புன்னகை என்பது மிக முக்கியமானது. கண்டிப்பாக இதைப் பற்றி நிறைய ஆய்வுகள் நிறைய விஷயங்கள் உங்களோடு கலந்து பேச போகிறேன்.

அதாவது பணம் இருந்தாலும் சரி பணம் இல்லை என்றாலும் சரி, பணம் ஆண்டவன் கொடுக்கக்கூடியது, நம்முடைய உடற்கூறுகள் தகவல்கள் நம்மிடம் ஒரு நோய் இருக்கு என்றால் அங்கேதான் மருந்தும் இருக்கும்.

அதே போல் தான் நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் நல்ல மருந்து சிரிப்பு.
நீங்கள் ஆனந்தமாக சிரிக்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் காலையில் எழும் பொழுது ஒரு 10 நிமிடம் கண்ணாடி முன் நின்று சிரித்து பாருங்கள்.
பணம் இல்லாத ஒரு நோய்க்கான மருந்து சிரிப்புதான்.

கண்டிப்பாக இதைப் பற்றி நிறைய விஷயங்கள் அடுத்தடுத்த வீடியோவில் பேச போகிறோம்.

நன்றி

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_number_9786556156

https://youtu.be/MG-2oVRig5E