astrology Remedies

Spread the love

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்

கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,

கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும்

நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00]

இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,

செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து,.

நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்

தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,

மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில்

தீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,

மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்

வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும்

கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,

திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *