ஜோதிடமும் தீர்வுகளும்

Spread the love

ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம்

குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு

எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண

சேஷ் டைகள் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி

12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு

சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.

21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி

வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில்

தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி

சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய,

திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு,

பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்

தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்

நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.

சிவன் கோவிலில் கால பைரவரையும்,

விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும்

வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *