மிருகசீரிஷம் நட்சத்திரம் 2ம்பாதம்:

Spread the love

மிருகசீரிஷம் நட்சத்திரம் 2ம்பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தோஷமான விஷயம் நடந்து விடாதா யாராவது ஜோதிடர் ஜோதிடம் சொல்லுவாங்களா?
வெளிநாட்டில் பார்க்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியான விஷயங்கள் மட்டும் சொல்லுங்கள் என்பார்கள்.

இது ஒவ்வொரு மனிதனின் மனநிலை இயல்பை வெளிப்படுத்தும்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் மிருகசீரிஷம் நட்சத்திரம் 2ம் பாதம்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் 7 12-க்குடைய ஆதிபத்தியம் பெறுவதால் திருமணம் சார்ந்த விஷயங்களுக்காக வந்தால் காதல் திருமணம் தான் நடக்கும் என்று சொல்ல வேண்டும்.

அதுவே செவ்வாய் அட்டமத்தில் இருந்தால் பிரச்சனைக்குரிய காதல் திருமணம்.
அதுவே 5ல் இருந்தால் ரிஷப லக்கினத்திற்கு 5ல் கன்னியில் செவ்வாய் இருக்கும் பொழுது எதிர்பாராத திடீர் யோகத்தைக் கொடுக்கும்.
உங்களுடைய வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

ஆனால் நண்பர்கள் மூலமாக கூட்டு தொழிலில் கவனமாக இருக்க வேண்டும்.

7, 12 க்குடைய விரயாதிபதி வரும்பொழுது ஒரு திருமணம் நடந்தாலும் ஒரு நல்ல நிகழ்ச்சியும் நடக்கும், ஒரு கெட்ட நிகழ்ச்சியும் நடக்கும்.

திருமணமான மூன்று மாதங்களில் வெளிநாடு செல்பவர்கள் யாராக இருப்பார்கள் என்றால் மிருகசீரிஷம் நட்சத்திரம் 2ம் பாதம் நாளில் திருமணம் செய்தவர்களாக இருப்பார்கள்.அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும்.
இந்த காலகட்டங்கள் மிருகசீரிஷ நட்சத்திரம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

அவர்களுடைய எண்ணங்கள் ஈடேறும் குழந்தைகள் சம்பந்தப்பட்டது, பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்டது.
குலதெய்வம் சம்பந்தப்பட்டது.
உங்களுடைய எல்லா கேள்விகளும் யோகத்தை கொடுக்கும்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் ஆயிரம் பலன்கள் சொல்ல முடியும்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை எல்லோருக்கும் ஒரே பலன் என்பது தான்.

7-ஆம் இடம் என்பது கணவன் மனைவி உறவுகள் உன்னுடைய நண்பர்கள் கூட்டுத் தொழில் என்னுடைய தொடர்புகள் எப்படி இருக்கு?
12 என்பது விரயம், தன்னுடைய பயணங்கள், தன்னுடைய முக்தி, மோட்சம் ,என்னுடைய வாழ்க்கையில் என் விரயங்கள், என்னுடைய தூக்கங்கள், என்னுடைய நிலைகள் எப்படி இருக்கு?

இதை இரண்டையும் இயக்கக்கூடிய காரகத்தன்மை யார் பெறுகிறார் என்றால் செவ்வாய்.

செவ்வாய் உடைய நட்சத்திரத்தில் மிருகசிரீஷம் 2ஆம் பாதம் வரும் பொழுது இவை அனைத்தும் சந்தோஷத்தை கொடுக்கும்.

நவாம்சத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும் பொழுது கண்டிப்பாக யோகத்தைக் கொடுக்கும்.

இவர்களே ஜாதகரே ஜாதகருக்கு எதிரியாக வருவார்.
அதனால் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும்.
தியானத்தின் மூலமாக அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *