திருமண தடை நீங்கக்கூடிய பரிகார ஸ்தலங்களில்

Spread the love

 

வணக்கம்

 

12 ராசிகளுக்கும் திருமண தடை நீங்கக்கூடிய பரிகார ஸ்தலங்களில் எளிய பரிகாரங்கள் இருந்தால் சொல்லுங்கள்.

 

திருமண தடை ஏன் வருதுன்னு பார்கனும்.

மேஷ லக்னத்தில் இருந்து மீன லக்னம் வரை லக்னாதிபதி யார் என்று பார்க்கனும்.இப்போ செவ்வாய் 6,8 ,10 ,12-ல் இருந்தால் ஜாதகரே காரணமாக இருப்பார்.

 

ALP மேஷ லக்னம் மேஷ ராசி இருப்பவர்கள் லட்சுமி நரசிம்மர் வழிபாடு கண்டிப்பாக ஒரு மாற்றத்தை குறிக்கும்.ஆத்மார்த்தமாக லட்சுமி நரசிம்மரை பிடித்தால் எப்படியாவது திருமண வாழ்கை முடித்து கொடுக்கும்.

திருமண வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிடும்.

ஆனா செவ்வாய் பலப்படனும்.இல்லைனா நட்சத்திரம் அஸ்வினி பரணி கார்த்திகை நட்சத்திரங்கள் சப்போட் பன்னால்தான் அந்த நிகழ்வு நடக்கும்.கடவுளுக்கு ஒரு பாதை, கிரகங்களுக்கு ஒரு பாதை, இரண்டுமே வெவ்வேறு பாதை.உதாரணமாக ஒருத்தரை பேசணும் என்று நினைக்கிறேன், பேசிட்டு அவரை ஏன் பேசுற அவர் மேல என்ன தப்பு இருக்கு என்று என்னுடைய உள் மனசு சொல்லும். என் மனசே 2 விதமாக போராடும்.அதுபோல் கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒன்றுக்குள் ஒன்று தனித்தனியாக வேலை பார்க்கும்.

 

கிரகங்களுடைய அமைப்பு யார், நட்சத்திரங்களுடைய அமைப்பு யார், பாவங்கள் உடைய அமைப்பு யார்,இப்படி நிறைய விஷயங்கள் அட்சய லக்ன பத்ததியில் ஆய்வு செய்து இருக்கிறோம்.

 

ALP ரிஷப லக்னம் , ரிஷப ராசி இருப்பவர்கள் மஹாலட்சுமி பலமாக பிடிக்க வேண்டும், நல்ல நாயகி அம்பாள்பலமாக பிடிக்க வேண்டும்.ஒவ்வொரு வாரமும் மஞ்சள் குங்குமம் வாங்கி ஆத்மார்த்தமாக பாதத்தில் கொடுத்து ,அங்கு உள்ளவர்களுக்கு கொடுத்தால் யோகத்தை கொடுக்கும்.

 

எல்லா ராசிக்காரர்களும், எல்லா லக்னமும் எந்த கோவிலாக இருந்தாலும்

எந்த பரிகாரமாக இருந்தாலும் திங்கட்கிழமை செய்யுங்கள்.

திங்கட்கிழமை செய்யக்கூடிய பரிகாரம் உடனடியாக மகிழ்ச்சி சந்தோஷத்தை கொடுக்கிறது.ஒரே அம்மன் கோவிலுக்கு திங்கட்கிழமை மறுபடி மறுபடி போங்க,திங்கட்கிழமை செய்யக்கூடிய பரிகாரங்கள் திங்கட்கிழமை நடக்கக்கூடிய நிகழ்வுகள் ,வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் தொடர்ச்சியாக திங்கட்கிழமை செய்யும்பொழுது யோகத்தை கொடுத்தே தீரும்.

 

 

ALP மிதுன லக்னம் இருப்பவர்கள் ஆஞ்சநேயரை பலமாக பிடிக்க வேண்டும்.

என்னுடைய திருமண வாழ்க்கை கூடிய விரைவில் அமையனும்.

20 – 30 திருமண காலம். 30 க்கு மேல் போகும் பொழுது நீங்கள் பலமாக ஒரே தெய்வத்தை பிடிக்கனும்.மிதுன லக்னம் இருப்பவர்கள் ஆஞ்சநேயரை பலமாக பிடியுங்கள். கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் வரன் அமைத்துக் கொடுப்பார்.

யார் மூலமாகவது ஒரு தொடர்பு கிடைத்துவிடும்.

 

ALP கடக லக்னம் இருப்பவர்கள் குருவாயூர் ஒரு தடவை போயிட்டு வந்தால் யோகத்தை கொடுக்கும்.

ALP சிம்ம லக்னம் வரும் பொழுது ராமேஸ்வரம் போயிட்டு கடலில் குளித்துவிட்டு ராமநாதர் சுவாமியை கும்பிட்டு வந்தால் யோகத்தை கொடுக்கும்.

ALP கன்னி லக்னம் போகும்பொழுது கொஞ்சம் அழுத்தத்தை கொடுத்தே தீரும். திடீர் திருமணங்கள்,பிரச்சனைக்குரிய திருமணங்கள் இப்படி நிறைய போராட்டம் இருக்கும்.கன்னி லக்னத்திற்கு கும்பகோணத்திற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய வடக்கு பார்த்த தூர்க்கை , அந்த கோவிலில் இருக்கக்கூடிய சிவன் பெயர் காமதேவன்புரிஸ்வரர் அங்க போயட்டு அர்ச்சனை செய்யனும்.

 

ALP துலாம் லக்னம் இருப்பவர்களுக்கு எளிமையாகவே ஒரு வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பை இவர்களே தட்டுவார்கள். துலாம் லக்னத்திற்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் எனக்கு வசதி வாய்ப்பு பத்தல , அதை சுற்றி இருக்கக் கூடிய அத்தனை நிகழ்வுகளும்தான். இந்த துலாம் ராசி வாய்ப்பு வரும்பொழுது பயன்படுத்திக்கனும்.கொல்லிமலை அரக்கொல்லிஸ்வரர் கோவிலுக்கு போகணும். அங்கு போனால் சந்தோஷமான ஒரு நிகழ்வு கிடைக்கும்.

நீங்கள் ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வரும் பொழுது ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தால் விட்டுவிடாமல் அதை தொடர்ச்சியாக பிடித்து கொள்ளுங்கள். தடைக்கு காரணமே அப்பா அம்மாதான்.

 

எல்லாரும் எனக்கு ஒரு அடையாளம், அங்கிகாரம் தேடுறாங்க சரி , அதை திருமண வாழ்க்கையோடு சேர்ந்து தேடுங்கள். இதனுடைய வலிமை வேறு அந்த உணர்வுகளை உணர்ந்தால்தான் திருமணம் நடக்கும்.

அந்த அமைப்பு இல்லை என்றால் திருமணம் நடக்காது.

 

ALP விருச்சிகம் லக்னம் இருப்பவர்களுக்கு பலமாக லட்சுமி தாயார் பலமாக பிடித்துக்கொள்ளனும். இது யோகத்தை கொடுக்கும்.

அதேபோல் காமாட்சியம்மன் காஞ்சிபுரம் கோவில்.

சந்திர மவுலீஸ்வரர் இல்லை சந்திரன் கோவில் ,இந்த கோவில்களுக்கு சென்றால் மனதை ஒருநிலைப்படுத்த முடியும்.

விருச்சிக லக்னம் விருச்சிக ராசி போனால் தவறை சரியாக செய்துவிட்டு கரெக்டாக follow பண்ணும்.

சனி திசை புதன் தசை நடக்கக்கூடிய காலகட்டத்தில், அனுஷம் கேட்டையில் போகும் பொழுது ரொம்ப கவனமாக இருக்கணும்.

 

தனுசு லக்னம் போகும்பொழுது எதார்த்தமாகவே திருமணம் அமையும்.

பெரியவர்கள் பார்த்து பேசி முடித்து இருப்பார்கள். சின்ன சின்ன தடைகள் தான் இருக்கும்.

சிதம்பரம் கோவிலுக்கு தில்லை காளி கோவிலுக்கு போனால் யோகத்தை கொடுக்கும்.

 

ALPமகர லக்னம் போகும்பொழுது காதல் வயப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும்.மகர லக்னம் போகும்பொழுது ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணும்.18-28 வயது காதல் எளிமையாக உள்ளே வரும்.

காதல் வயப்படுவார்கள். ஈர்ப்பு எதார்த்தமாக நடக்கும்.ஆத்மார்த்தமாக இருக்கும். முத்துமாரியம்மன் கோவிலுக்கு போனால் நல்லது.

 

ALP கும்ப லக்னம் போகும்பொழுது திருமணத்தில் திட்டமிட்டு செயல்படுகின்ற முக்கியமான ஒரு ராசி.

கண்ணாலயே ஸ்கேன் பண்ணுவார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பலமாக பிடித்துக்கொண்டால் திருமணவாழ்க்கை அமையும்.

 

ALP மீன லக்னம் போகும்பொழுது காதல் எதிர்பார்த்த மாதிரி இருக்காது சில நேரம் பிடிக்கும், சில நேரம் பிடிக்காது என்பார்கள்.ஏன்னா பெற்றோர்களுடைய நிகழ்வுகள் கொஞ்சம் கடுமையாகவும் போராட்டமாகவும் இருக்கும்.

மீன லக்னம் குடும்ப சூழ்நிலை கொஞ்சம் கவனமாக எடுத்துக் கொள்வார்கள் காதலில் மட்டும்.ஈஸ்வரி கோவிலுக்கு போயிட்டு வாருங்கள். இந்த மீன லக்னம் மீன ராசிகாரர்களுக்கு யோகமான நிகழ்வை கொடுக்கும்

நன்றி

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *