திருமண தடை நீங்கக்கூடிய பரிகார ஸ்தலங்களில்

 

வணக்கம்

 

12 ராசிகளுக்கும் திருமண தடை நீங்கக்கூடிய பரிகார ஸ்தலங்களில் எளிய பரிகாரங்கள் இருந்தால் சொல்லுங்கள்.

 

திருமண தடை ஏன் வருதுன்னு பார்கனும்.

மேஷ லக்னத்தில் இருந்து மீன லக்னம் வரை லக்னாதிபதி யார் என்று பார்க்கனும்.இப்போ செவ்வாய் 6,8 ,10 ,12-ல் இருந்தால் ஜாதகரே காரணமாக இருப்பார்.

 

ALP மேஷ லக்னம் மேஷ ராசி இருப்பவர்கள் லட்சுமி நரசிம்மர் வழிபாடு கண்டிப்பாக ஒரு மாற்றத்தை குறிக்கும்.ஆத்மார்த்தமாக லட்சுமி நரசிம்மரை பிடித்தால் எப்படியாவது திருமண வாழ்கை முடித்து கொடுக்கும்.

திருமண வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிடும்.

ஆனா செவ்வாய் பலப்படனும்.இல்லைனா நட்சத்திரம் அஸ்வினி பரணி கார்த்திகை நட்சத்திரங்கள் சப்போட் பன்னால்தான் அந்த நிகழ்வு நடக்கும்.கடவுளுக்கு ஒரு பாதை, கிரகங்களுக்கு ஒரு பாதை, இரண்டுமே வெவ்வேறு பாதை.உதாரணமாக ஒருத்தரை பேசணும் என்று நினைக்கிறேன், பேசிட்டு அவரை ஏன் பேசுற அவர் மேல என்ன தப்பு இருக்கு என்று என்னுடைய உள் மனசு சொல்லும். என் மனசே 2 விதமாக போராடும்.அதுபோல் கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒன்றுக்குள் ஒன்று தனித்தனியாக வேலை பார்க்கும்.

 

கிரகங்களுடைய அமைப்பு யார், நட்சத்திரங்களுடைய அமைப்பு யார், பாவங்கள் உடைய அமைப்பு யார்,இப்படி நிறைய விஷயங்கள் அட்சய லக்ன பத்ததியில் ஆய்வு செய்து இருக்கிறோம்.

 

ALP ரிஷப லக்னம் , ரிஷப ராசி இருப்பவர்கள் மஹாலட்சுமி பலமாக பிடிக்க வேண்டும், நல்ல நாயகி அம்பாள்பலமாக பிடிக்க வேண்டும்.ஒவ்வொரு வாரமும் மஞ்சள் குங்குமம் வாங்கி ஆத்மார்த்தமாக பாதத்தில் கொடுத்து ,அங்கு உள்ளவர்களுக்கு கொடுத்தால் யோகத்தை கொடுக்கும்.

 

எல்லா ராசிக்காரர்களும், எல்லா லக்னமும் எந்த கோவிலாக இருந்தாலும்

எந்த பரிகாரமாக இருந்தாலும் திங்கட்கிழமை செய்யுங்கள்.

திங்கட்கிழமை செய்யக்கூடிய பரிகாரம் உடனடியாக மகிழ்ச்சி சந்தோஷத்தை கொடுக்கிறது.ஒரே அம்மன் கோவிலுக்கு திங்கட்கிழமை மறுபடி மறுபடி போங்க,திங்கட்கிழமை செய்யக்கூடிய பரிகாரங்கள் திங்கட்கிழமை நடக்கக்கூடிய நிகழ்வுகள் ,வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் தொடர்ச்சியாக திங்கட்கிழமை செய்யும்பொழுது யோகத்தை கொடுத்தே தீரும்.

 

 

ALP மிதுன லக்னம் இருப்பவர்கள் ஆஞ்சநேயரை பலமாக பிடிக்க வேண்டும்.

என்னுடைய திருமண வாழ்க்கை கூடிய விரைவில் அமையனும்.

20 – 30 திருமண காலம். 30 க்கு மேல் போகும் பொழுது நீங்கள் பலமாக ஒரே தெய்வத்தை பிடிக்கனும்.மிதுன லக்னம் இருப்பவர்கள் ஆஞ்சநேயரை பலமாக பிடியுங்கள். கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் வரன் அமைத்துக் கொடுப்பார்.

யார் மூலமாகவது ஒரு தொடர்பு கிடைத்துவிடும்.

 

ALP கடக லக்னம் இருப்பவர்கள் குருவாயூர் ஒரு தடவை போயிட்டு வந்தால் யோகத்தை கொடுக்கும்.

ALP சிம்ம லக்னம் வரும் பொழுது ராமேஸ்வரம் போயிட்டு கடலில் குளித்துவிட்டு ராமநாதர் சுவாமியை கும்பிட்டு வந்தால் யோகத்தை கொடுக்கும்.

ALP கன்னி லக்னம் போகும்பொழுது கொஞ்சம் அழுத்தத்தை கொடுத்தே தீரும். திடீர் திருமணங்கள்,பிரச்சனைக்குரிய திருமணங்கள் இப்படி நிறைய போராட்டம் இருக்கும்.கன்னி லக்னத்திற்கு கும்பகோணத்திற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய வடக்கு பார்த்த தூர்க்கை , அந்த கோவிலில் இருக்கக்கூடிய சிவன் பெயர் காமதேவன்புரிஸ்வரர் அங்க போயட்டு அர்ச்சனை செய்யனும்.

 

ALP துலாம் லக்னம் இருப்பவர்களுக்கு எளிமையாகவே ஒரு வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பை இவர்களே தட்டுவார்கள். துலாம் லக்னத்திற்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் எனக்கு வசதி வாய்ப்பு பத்தல , அதை சுற்றி இருக்கக் கூடிய அத்தனை நிகழ்வுகளும்தான். இந்த துலாம் ராசி வாய்ப்பு வரும்பொழுது பயன்படுத்திக்கனும்.கொல்லிமலை அரக்கொல்லிஸ்வரர் கோவிலுக்கு போகணும். அங்கு போனால் சந்தோஷமான ஒரு நிகழ்வு கிடைக்கும்.

நீங்கள் ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வரும் பொழுது ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தால் விட்டுவிடாமல் அதை தொடர்ச்சியாக பிடித்து கொள்ளுங்கள். தடைக்கு காரணமே அப்பா அம்மாதான்.

 

எல்லாரும் எனக்கு ஒரு அடையாளம், அங்கிகாரம் தேடுறாங்க சரி , அதை திருமண வாழ்க்கையோடு சேர்ந்து தேடுங்கள். இதனுடைய வலிமை வேறு அந்த உணர்வுகளை உணர்ந்தால்தான் திருமணம் நடக்கும்.

அந்த அமைப்பு இல்லை என்றால் திருமணம் நடக்காது.

 

ALP விருச்சிகம் லக்னம் இருப்பவர்களுக்கு பலமாக லட்சுமி தாயார் பலமாக பிடித்துக்கொள்ளனும். இது யோகத்தை கொடுக்கும்.

அதேபோல் காமாட்சியம்மன் காஞ்சிபுரம் கோவில்.

சந்திர மவுலீஸ்வரர் இல்லை சந்திரன் கோவில் ,இந்த கோவில்களுக்கு சென்றால் மனதை ஒருநிலைப்படுத்த முடியும்.

விருச்சிக லக்னம் விருச்சிக ராசி போனால் தவறை சரியாக செய்துவிட்டு கரெக்டாக follow பண்ணும்.

சனி திசை புதன் தசை நடக்கக்கூடிய காலகட்டத்தில், அனுஷம் கேட்டையில் போகும் பொழுது ரொம்ப கவனமாக இருக்கணும்.

 

தனுசு லக்னம் போகும்பொழுது எதார்த்தமாகவே திருமணம் அமையும்.

பெரியவர்கள் பார்த்து பேசி முடித்து இருப்பார்கள். சின்ன சின்ன தடைகள் தான் இருக்கும்.

சிதம்பரம் கோவிலுக்கு தில்லை காளி கோவிலுக்கு போனால் யோகத்தை கொடுக்கும்.

 

ALPமகர லக்னம் போகும்பொழுது காதல் வயப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும்.மகர லக்னம் போகும்பொழுது ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணும்.18-28 வயது காதல் எளிமையாக உள்ளே வரும்.

காதல் வயப்படுவார்கள். ஈர்ப்பு எதார்த்தமாக நடக்கும்.ஆத்மார்த்தமாக இருக்கும். முத்துமாரியம்மன் கோவிலுக்கு போனால் நல்லது.

 

ALP கும்ப லக்னம் போகும்பொழுது திருமணத்தில் திட்டமிட்டு செயல்படுகின்ற முக்கியமான ஒரு ராசி.

கண்ணாலயே ஸ்கேன் பண்ணுவார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பலமாக பிடித்துக்கொண்டால் திருமணவாழ்க்கை அமையும்.

 

ALP மீன லக்னம் போகும்பொழுது காதல் எதிர்பார்த்த மாதிரி இருக்காது சில நேரம் பிடிக்கும், சில நேரம் பிடிக்காது என்பார்கள்.ஏன்னா பெற்றோர்களுடைய நிகழ்வுகள் கொஞ்சம் கடுமையாகவும் போராட்டமாகவும் இருக்கும்.

மீன லக்னம் குடும்ப சூழ்நிலை கொஞ்சம் கவனமாக எடுத்துக் கொள்வார்கள் காதலில் மட்டும்.ஈஸ்வரி கோவிலுக்கு போயிட்டு வாருங்கள். இந்த மீன லக்னம் மீன ராசிகாரர்களுக்கு யோகமான நிகழ்வை கொடுக்கும்

நன்றி

 

 

 

 

அட்சய லக்ன பத்ததியில் பிரசன்னம் எப்படி பார்பது?

அனைவருக்கும் வணக்கம்,

அட்சய லக்ன பத்ததியில் பிரசன்னம் எப்படி பார்பது?

வந்திருக்கவங்க கேள்வி எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்

உதாரணமாக சித்திரை, வைகாசி, ஆனி ,ஆடி மாதம் சூரியன் எங்கே இருக்கும்?

பிரசன்ன லக்னம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் லக்னம் மாரும், உதாரணமாக மென்பொருளில் 1′ முதல்.

120 குள் எதாவது ஒரு எண்,

உதாரணத்திற்கு அவர் சொன்ன எண் 46,  வயது, 46 நம்பர் இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம். 46 வயது எடுத்தேன். ஒரு வயது 3′ நகரும். 12 ராசி கட்டங்களின் மொத்த அளவு 360′

ஒரு மனிதனுடைய ஆயுள் காலங்கள் தசா வரிசைகள் 120.

360/120 அதாவது ஒரு வயதுக்கு நம்முடைய உடல் 3′ பெருக்கம் அடைகிறது.

இதுதான் நம்முடைய அட்சய லக்னம்.

46 x 3 = 138′

அவருடைய லக்னம் நகர்ந்திருக்கிறது. நாம் இரண்டு முறையில் பிரசன்னம் பார்க்கிறோம்.

போன ஜென்மத்தில் நம்முடைய உடல் அழிந்த பகுதியிலிருந்து இப்பொழுது ஆரம்பிக்கப் படுவதை லக்னம் என்கிறோம்.

சூரியனுடைய ஆத்ம கிரகம் எங்கிருந்து அழிக்கப்பட்டதோ அங்கிருந்துதான் தொடங்கும். ரிஷப லக்னத்தில் 8′ மீதம் இருக்கும்.ஒரு நட்சத்திர பாதத்தில் 3, 20 பாகை  6,40 பாகை லக்னப்புள்ளி செல்லும்.

கார்த்திகை 4ம் பாதம் லக்கனத்திலிருந்து ALP லக்னம் என்ன என்பது தான் கேள்வி, 6 என்றால் கடன், வம்பு, வழக்கு, நோய் நொடி சம்பந்தப்பட்டது உருவாகும். சூரியன் பலமான நட்சத்திரம் என்பதால் 1, 2, 3, 4, வீடு, இடம், பொருள், சொத்து வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்டது. சூரியன்எங்கு உள்ளதோ அங்குதான் பிரச்சனை உண்டாகும். ALPலக்னத்திற்கு சூரியன் 3-ம் இடத்தில் உள்ளது.

3ம் இடம் சகோதரம், அதாவது 3, 8,11 சம்பந்தப்படும் பொழுது சகோதர வழியில் இதன் பிரச்சனை உண்டாகும். ஒரு பங்கு பிரித்தால் பிரச்சனை தீரும். கார்த்திகை முடிந்து ரோகிணி நட்சத்திரம் வந்தால் கண்டிப்பாக மாற்றம் உருவாகும். 1 டிகிரி 4 மாதம். 8 மாதம் பிரச்சனையாக இருக்கும். வீடு வாங்கினால் விரயம் ஏற்படும். விற்றாலும் பணம் சரியாக கிடைக்காது. கேட்கக் கூடிய நேரத்தில் கேள்விக்கான பதில் கொடுக்கனும். இப்படி சில விஷயங்களை

அட்சய லக்ன பத்ததியில் ஆய்வு செய்கிறோம்.

பிரசன்னம் முறையில் ஆய்வு செய்கிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அட்சய லக்ன

பத்ததியின் மென்பொருளில் இந்த விஷயங்களை, கூட்டி உள்ளோம். மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/tQwoa9hmZQo

 

அட்சய லக்னமும், ராகு கேது பெயர்ச்சியும்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்னமும், ராகு கேது பெயர்ச்சியும்.
ஒவ்வொருவரும் பயப்படக்கூடிய விஷயம் ராகு-கேது.
ஜாதகத்தில் ராகு கேது பெயர்ச்சி ஆக இருந்தாலும் சரி, எல்லாரும் ராகு கேதுக்களுக்கு பயப்பட வேண்டுமா? இல்லை.

ராகு -கேது க்கள் நல்லதும் செய்யும்.
ஒரு பிரமாண்ட யோகத்தை கொடுக்கக் கூடியதும் ராகு-கேது தான்.
ராகு கேதுக்களின் விசேஷம் என்னவென்றால் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, கொடுத்தே தீரும் அவர்களுடைய சிறப்பை தான் பார்க்கப் போகிறோம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ராகு -கேது களின் ராஜ யோகங்கள்.
ஜெனன லக்னத்திற்கு ராகு கேது தோஷம் இருந்தால் லக்னத்தில் ராகு,
7ல் கேது அவர்கள் பிறக்கும்பொழுது குடும்பத்தில் சில பிரச்சனைகள், குழப்பங்கள் உருவாகும்.

உதாரணமாக மேஷ லக்னத்தில் ஒருவருக்கு ராகு இருந்து, 7ம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு 20 to 30 வயது , அட்சய லக்கனம் மிதுனம்.மிதுன லக்னத்திற்கு ராகு நல்லது செய்வாரா? பிரமாண்டமான யோகத்தை செய்வார்.
மிதுன நட்சத்திரத்தில் லக்னபுள்ளி செல்லும் பொழுது அவர்கள் திசையில் ராகு புத்தியோ, ராகு திசையோ ஏற்படுமானால் அதுதான் அவர்களுடைய வாழ்க்கையில் பொற்காலம் ஆகும்.
அந்த அளவிற்கு ராகு-கேதுக்கள் வாழ்க்கையில் உயர்வையும், உச்சத்தையும் ஏற்படுத்துவார்கள்.
அட்சய லக்கனம் துலாம் லக்னமாக இருந்து, சுவாதி நட்சத்திரத்தில் சென்று 11ம் பாவ அதிபதியாக இருந்தால்
அங்கேயேயும் பிரம்மாண்டமான யோகத்தை கொடுக்கும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் ராகு கேதுகள் பிரமாண்ட யோகத்தையும் கொடுக்கும்.
மீண்டும் ஒரு நல்லதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/TGg4VQ_4j20

முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோஷங்கள், நல்லது கெட்டது, மகிழ்ச்சி, இன்பம் , துன்பம்இது எல்லாம் கிரகங்களின் அமைப்பு.

அட்சய லக்ன பத்ததி யில் என்னுடைய அடுத்த கட்ட ஆய்வுகள் என்ன?

இப்பொழுது உள்ள ஜாதகருடைய முன்ஜென்ம ஜாதாக அமைப்புகள் பற்றிதான் என்னுடைய ஆய்வுகள்.

இந்த ஜாதகத்தை உடைய தொடர் நிகழ்வுகளை நான் உருவாக்கி இருக்கேன்.

சில ஜாதகர்களுக்கு யோகமான ஜாதகமாக பார்த்திருப்போம். ஆனால் உண்மையில்அந்த ஜாதகர் எப்பொழுதும் வறுமையிலும் துன்பத்திலும்,நோய்நொடி யான வாழ்க்கை நடத்துவர்.ஆனா ஒண்ணுமே இல்லாத ஜாதகம் அதாவது அவர் கோடான கோடி வாழ்க்கை வாழ்வார்,இதைப் பற்றி ஆய்வு பண்ணும் போதுதான் கண்டிப்பாக இதற்கு முன் ஜென்ம ஜாதகம் இருக்கும் அதை ஆய்வு பண்ண முடிவு செய்தேன்.

அந்த ஜாதகத்திற்கும் இந்த ஜாதகத்திற்க்கும் இன்றைக்கு உள்ள தொடர்பு எப்படி இருக்கும்னா?

ஒரு நண்பர் வந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்காது அந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன?என்பதை உணரும் பொழுது அதிர்ச்சியும் பேரின்பமும் ஒரு பயம் எனக்குஉருவானது.

வெளியிட முடியாத சூழ்நிலையில இருக்கேன்

அதை வெளியிடும்பொழுது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

ஒரு ஜாதகர் மீன லக்னம்,மீன லக்கனத்தில் 2 ,5,8 ,11 சம்பந்தப்படும்போது சுய கர்மா இயங்கும் சுய கர்மா என்பது நான் செய்த யோகங்கள் அவயோகங்களையும் குறிக்கும்.உண்மையாவே இயங்குதா னு ஆய்வு பண்ணும்போதுஅந்த ஜாதகத்தை எடுத்து பார்க்கும் பொழுது இரண்டாம் வீட்டில் மீன லக்னத்துல இருந்து சனிபகவான் இயக்குறாரு.முன்ஜென்ம ஜாதகத்தில அதே லக்கனத்திலிருந்து சனி பகவான் இயக்குறாரு இதே உத்திரட்டாதி நட்சத்திரம். 2ம் சுய கர்மா 5ம் சுயகர்மா இது எப்படி இயங்குது.இதை உணரும் போது இந்த விஷயங்கள் நிறைய விதமான ஆச்சரியங்களை உண்டாக்கியது.நான் சொல்லக்கூடிய விஷயங்கள் நான் பதிவு பன்ற விஷயங்கள் ஏன் சொல்ல வரனா?ஆய்வு பண்ணி பார்த்தால் 2 வருடம் கழித்தோ 5 வருடம் கழித்து இல்ல 10 வருடம் கழித்து 100 வருடம் கழித்து இந்த விஷயத்தை உணர்வாங்க.கண்டிப்பாக கூடிய விரைவில் வெளியிட வேண்டிக்கிறேன்.

அட்சய லக்ன பத்ததி யில் இன்றைக்கு ஒரு ஜாதகத்தை பார்ப்போம்.இப்பொழுது பார்க்கக்கூடிய ஜாதகம்,இந்த ஜாதகருடைய லக்கனம் விருச்சிகம் ALP லக்கனம் கும்பம்,இந்த ஜாதகருடைய கேள்விகுழந்தைகள் பற்றி. 1, 2, 3, 4, 5,      5-ம் வீடுபுதனுடைய வீடுஇந்த லக்னத்துக்கு இரண்டு அட்டமத்திலே போறாரு அதாவது இரண்டு ஆதிபத்திய தன்மைய செய்வது. 5க்கு அதிபதியுமான 2க்கு அதிபதியான புதன் அட்டமத்தில் உள்ளது.பத்தில் ஒரு பாவி இருந்தாலும் குழந்தை பாக்கியம் உண்டு.ஐந்தாம் அதிபதி அட்டமாதிபதி செயல்படும் பொழுது அந்த ஜாதகர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.மருத்துவ செலவுகள் சம்பந்தப்பட்டு இந்த ஜாதகர் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.விரயாதிபதி லக்னத்தில் உள்ளது.10 ல் சனி சம்பந்தப்படுவதால் இந்த ஜாதகத்திற்கு தத்து குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது.புதன் பகவானுடைய நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் விரயத்தில் லக்னாதிபதி உள்ளது. புதனும் சனியும் சம்பந்தப்படும்போது இந்த ஜாதகர் மருத்துவ செலவுகள் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.குழந்தைகள் பற்றிய அமைப்பில் குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். 2க்கும் 11-க்கும் அதிபத்தியத்தில் இருக்கக் கூடிய குருபகவான் பன்னிரண்டில் விரயத்தை உருவாக்கும்.யோகத்தைக் கொடுக்கும் ஆனா? யோகத்தை கொடுக்கல.கண்டிப்பாக இவருடைய முயற்சிக்கு தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.துர்க்கை அம்மன் உடைய வழிபாடு இந்த காலகட்டத்தில் யோகமாக இருக்கும்.சதய நட்சத்திரம் முடிந்து அடுத்து வரக்கூடிய பூரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு வாய்ப்பு உண்டு.குரு நட்சத்திரத்தில் இருந்தால் வாய்ப்பு உண்டு.2021 ஜனவரி 31ஆம் தேதிக்கு அப்பறம் யோகத்தை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.ஐந்தாம் அதிபதி அஷ்டமத்தில் குரு இருப்பதால் அங்கு பிரச்சனைகள் உருவாகும்.கும்ப லக்னத்திற்கு ஏழாம் வீடு சிம்மம்.சிம்ம லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான்.அவரே 6 விடாய் போவதால் பிரச்சனை உண்டு.எட்டுக்குடி முருகன் கோவிலில் குழந்தைகள் சார்ந்த அமைப்பு உள்ளது.செவ்வாய் அட்டமத்துல3க்கு உடையவன் அட்டமத்துல.முருகனை பலமாக கும்பிடுவதால் இந்த ஜாதகருக்கு ஒரு வாய்ப்பு உண்டு.

நல்லதொரு நிகழ்வேஅமையட்டும் மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி, வணக்கம்.

01.02.2017இந்த நாள் இனிய நாள்.

 

 

இந்த நாள் இனிய நாள்.
01.02.2017
புதன் கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – குடும்ப உறுப்பினர்களின் விவாதம் வேண்டாம்.
பரணி – பணவரவு, வாகனம், வீடு சார்ந்த பேச்சுவார்த்தை அமையும், மகிழ்ச்சி, கோவில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு.
கார்த்திகை – வீண் வார்த்தையால் விபரிதம், கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருத்தல், விரயம் , கவனம் தேவை.
ரோகிணி – லாபம்.
மிருகசீரிடம் – தொழில் முன்னேற்றம் உண்டு, லாபமும் உண்டு.
திருவாதிரை – கணவன் மனைவி வீண் விவாதம் வேண்டாம்.
புனர்பூசம் – பொறுமை மிகவும் அவசியம், அவசரபட வேண்டாம்.
பூசம் – திடிர் அதிர்ஷ்மான செய்தி உண்டு.
ஆயில்யம் – கடன், உடல்நிலை கவனம், விரயம்.
மகம் – மகிழ்ச்சி.
பூரம் – புதிய வாய்ப்பு பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்துதல்.
உத்திரம் – மறக்க முடியாத நாள், கவனம் .
அஸ்தம் – சொந்த தொழில் மேன்மை உண்டு, கடன் வாங்குதல், விரயமான காலம் கவனம் .
சித்திரை – மகிழ்ச்சி, லாபம்.
சுவாதி – பதவி, புகழ், வெற்றி மகிழ்ச்சி.
விசாகம் – ஆன்மிக பயணம், மக்கள் தொடர்பு விஷயங்களிள் பங்களிப்பு.
அனுசம் – தன வரவு .
கேட்டை – வாகனத்தில் கவனம் .
மூலம் – பயணம், முன்னோர்கள் வழிபாடு, அரசு தொடர்பான நபரை சந்தித்தல், லாபம்.
பூராடம் – மன உளைச்சல்.
உத்திராடம் – பணம் சார்ந்த பிரச்சினை தலையிட வேண்டாம், அருகில் உள்ள ஐயனார் கோவில் வழிபடவும்.
திருவோணம் – எதோ பயம் வாட்டி வதைக்கும்.
அவிட்டம் – வாகனத்தில் கவனம், அலைச்சல், குழம்ப்பமான மனநிலை ஒரு முடிவும் எடுக்க முடியாது.
சதயம் – வெற்றி.
பூராட்டாதி – அரசு வகையில் லாபம், மன உளைச்சல்
உத்திரட்டாதி – தொழில் மேம்படும்.
ரேவதி – குலத்தொழில், சொந்த தொழில் மேம்பாடு ,பயணம், புதிய நபரை சந்தித்தல் .
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.