அட்சய லக்ன பத்ததியில் ஒருவருக்கு எப்படி பலன் பார்க்கப்படுகிறது?

அன்பே சிவம், அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் அட்சய ராசி என்ற இரண்டாவது நூல் வெளிவந்துள்ளது.

இந்த அட்சய லக்ன பத்ததியில் லக்கனம்  வளரக்கூடிய தன்மைகளும், ராசி வளர்ந்து அதனுடைய பலன்கள் எப்படி இருக்கும் என்ற தன்மைகளும் இரண்டாவது புத்தகத்தில் வெளியிட்டுள்ளேன்.

அட்சய லக்ன பத்ததியில் ஒருவருக்கு எப்படி பலன் பார்க்கப்படுகிறது?

லக்னம் மேஷ லக்னம், அவருடைய 30 வயதில் மிதுன லக்னம்,மிதுன லக்னத்திற்கு தசாபுத்தி பார்க்கணும்.

இன்றைக்கு நடக்கக்கூடிய தசாநாதன் ,புத்தி நாதன் எங்கிருந்து இயக்குகிறார் என்பதை பார்க்கணும். இதுதான் நம்முடைய அட்சய லக்ன பத்ததி பார்க்கப்படுவது.

இதை வைத்தே ஜாதகத்தை ஆய்வு செய்யலாம்.

உதாரணமாக, மிதுன லக்னத்திற்கு ராகு திசை நடக்கிறது. பிறந்த கன்னி ராசி. இன்றைக்கு துலாம் ராசியில் அட்சய ராசி இயங்குகிறது.

ராகு திசை அட்சய லக்னத்திற்கு 5ம் வீட்டை இயக்குகிறது. ஆனால் இந்த ராகு பகவான் ,உதாரணமாக அட்சய லக்கினத்திற்கு 11ல் நிற்கிறது.

அவர் எதிர்பார்த்த யோகங்கள், எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாமே பெரிய பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கும்.

மிதுன லக்னத்திருந்து 5ம் இடத்தை சுவாதி நட்சத்திரத்தில் இருந்து ராகு தசை இயக்குகிறது. தசை நாதன் ராகு 11-ல் இயக்குறார். கோடி கோடியான செல்வம் கோடி கோடியான பிரம்மாண்டத்தை கொடுக்கக்கூடிய காலமாக இது அமைகிறது.

30 வயதிற்குள்ளேயே இந்த ஜாதகருக்கு பெரிய கோடிஸ்வரன் ஆகும் வாய்ப்பு உள்ளது.

குருதிசை வரக்கூடிய காலகட்டத்தில் முதல் மூன்று பாதங்கள் விசாகம்1, விசாகம்2, விசாகம்3, செல்லக்கூடிய காலகட்டத்தில்

3,6க்குடையவன் ராசியிலிருந்து லக்கனம் கடக லக்கனம், ஆக மாறுகிறது. கடக லக்கினத்திற்கு  6ம் வீட்டில் குருபகவான் நடத்துவார்.

குருபகவான் கடக லக்கினத்திற்கு 9ம் வீட்டிலிருந்து நடத்துவார்.இதனால்

எதிர்பாராத யோகம் உண்டாகும்.நாலைந்து கட்டிடங்கள் கட்டி பெரிய கோடீஸ்வரனாக வாழ்வார். மேஷ லக்னம் ஜென்ம லக்னம் ,ALP லக்னத்திற்கு 12ல் குரு. அதனால் யோகத்தை செய்யாது.

கடக லக்னத்தில் 9ம் இடத்தில் இருந்து குரு, தசாநாதன் யோகத்தை கொடுப்பார் என்பது தான் அட்சய லக்ன பத்ததியில் என்னுடைய ஆய்வு.

ஒவ்வொரு காலமும் மாற மாற, வயது மாற மாற ,அவர்களுடைய வாழ்க்கை ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

வயது மாற்றம் கொடுக்கும்போது அட்சய லக்னம் அதற்கு தகுந்தார்போல் பலனை கொடுக்கும்.

  • 20 வயதில் சுக்கிர திசை வருவதற்கும்,
  • 60 வயதில் சுக்கிர திசை வருவதற்கும்,
  • 80 வயதில் சுக்கிர திசை வருவதற்கும் யோகம் உண்டு.

ஒருவருக்கு 40 வயதில் சுக்கிர திசை வரும் பொழுது ஓரளவு வளர்கிறார். 80 வயதில் கோடீஸ்வரன் ஆகிவிடுகிறார்.

மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கக்கூடியது இந்த அட்சய லக்கனம், எங்கிருந்து யார் இயக்குகிறார் என்பதுதான்.

அட்சய லக்னத்திற்கு அடுத்த அதிபதி யார் இயக்குகிறார். உதாரணத்திற்கு கடக லக்னத்திற்கு அடுத்த 10 வருட அதிபதி சந்திரன். அதனால் யோகமாக இருக்கும்.அதற்குள் இருக்கக் கூடிய நட்சத்திரங்கள் புனர்பூசம் ,பூசம், ஆயில்யம். இந்த மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர அதிபதிகள் பலமாக அமையவேண்டும். குரு,சனீஸ்வரன், புதன்.இந்த 3 கிரகங்களும் பலமாக அமைந்தால் மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும், மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

மூன்று கிரகங்களும் சந்திரனுக்கு 6 ,8 , 12ல் மறைந்தால் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இந்த ஜாதகருக்கு யோகத்தை கொடுக்காது.

எந்த பாதையில் அதிகமா வெற்றி கிடைக்கும் என்பதை அடுத்த நிகழ்வில் பார்ப்போம்.

நல்லதொரு நிகழ்வே அமையட்டும்.

நன்றி ,வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/fBQLemFc-vE

நான் பாசக்காரன். பாசத்தை பற்றி இன்று உங்களுடன் பேச வந்துள்ளேன்

அன்பே சிவம் ,அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

நான் பாசக்காரன். பாசத்தை பற்றி இன்று உங்களுடன் பேச வந்துள்ளேன்,

பாசம் என்பது உயிருள்ள பொருள்கள்மீது மட்டுமில்லை, உயிரற்ற பொருட்களின் மீதும் பாசம் வைக்கணும். அதை தான் கூறுகிறேன்.

பொருட்களை இது உயிருள்ளது உயிரற்றது என பிரிக்க வேண்டாம் எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள்.கண்டிப்பாக வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

இது உயிரற்றது ,உயிர் உள்ளது என்று ஒவ்வொரு பொருட்களை நாம் சொல்கிறோம். ஆனால் அதில் ஒவ்வொன்றுக்கும் உயிர் உண்டு.

வாழ்க்கையில் நாம் எப்படி இயங்குகிறோமோ அதேபோல்தான் வாகனங்களும் இயங்குகிறது.

நான் ஒவ்வொரு தடவையும் வெளியில் செல்லும் பொழுது வீட்டை தொட்டு வணங்கி விட்டு தான் செல்வேன். அது எனக்கு வீடு கையசைத்து போய்ட்டு வா என்று கூறுவது போல் இருக்கும்.

தேவையான பொருள், தேவையற்ற பொருள் என்ற விஷயத்தை விட நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும் ஒருமுறை நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் நன்றி சொல்லும் பொழுது ஒரு பாசம், ஒரு இணைவு உங்களை அடுத்த கட்ட பரிணாமத்திற்கு அழைத்து செல்லும்.

உங்கள் பேனா உங்கள் சட்டைப்பையில் இருப்பதற்கு நன்றி சொல்லுங்கள். அதன்பிறகு நீங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்தும், வெற்றி பயணத்திற்கான கையெழுத்தாகும்.

நான் ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடனும், தூங்க செல்வதற்கு முன்னும் பஞ்சபூதங்களுக்கு நன்றி சொல்வேன். கடவுளுக்கும் நன்றி சொல்வேன்.

பஞ்சபூதம் ஆன இந்த உடல் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆனந்தமான வார்த்தை.

நீங்கள் ஆனந்தமாக வாழ வேண்டுமென்றால் முதலில் நன்றி சொல்லுங்கள்,

கை தட்டுங்கள்,சந்தோஷமான ஒரு நிகழ்வை கொடுக்கும் .உங்கள் வாழ்க்கை மாறும்.

உணவு சாப்பிடும் பொழுது இந்த உணவை தொட்டு நன்றி சொல்லுங்கள். அந்த உணவு உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு சக்தியாக அமையும்.உடலுக்கு மருந்தாக சென்று உடலும் மனமும் சந்தோஷமாக இருக்கும்.

வாழ்க்கையில் எல்லா பொருட்களின் மீதும் அன்பு செலுத்துங்கள். இது வேண்டும், இது வேண்டாம் என நினைக்க வேண்டாம்.உங்களுடைய தேவையான பொருளுக்கு ஒவ்வொரு முறையும் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.

ஒரு நாள் 10 பொருட்களுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்த நாட்கள் 20 பொருள்கள் உங்கள் கண்ணில் படும்.

தொலைத்தொடர்பு கோபுரங்கள் அதற்கு ஒரு நன்றி சொல்லுங்கள்.அதன் பிறகு உங்களுக்கு போன் வந்தால், அந்த இணைப்பு துண்டிக்கப் படாமல் வரும்.

இது என்னால் உணர முடிந்த ஒரு விஷயம்.

எல்லா பொருட்களின் மீதும் அன்பு செலுத்துங்கள்.

ஆனந்தமாக வாழ்வதற்கு எல்லா பொருட்களும் துணையாக இருக்கும்.

நல்லதொரு நிகழ்வே அமையட்டும் நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/cRpv-GzlSPI

நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும்

அன்பே சிவம், அன்பே ஆனந்தம்,
அன்பே வாழ்க்கை,
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க,
“மகிழ்ச்சி” என்கின்ற இந்த ஒரு வார்த்தை எல்லோருக்கும் பிடிக்கும்.
அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேட்டால் அதை ஒருமுடிவாகவே சொல்ல மாட்டார்கள்.

மகிழ் என்றால் “இன்பம்”, அந்த இன்பம் என்பது மூலாதாரத்திலிருந்து நமது உச்சந்தலை வரை சந்தோஷத்தில் திளைக்க கூடிய ஒரு நிகழ்வை மகிழ்ச்சி என்று சொல்லலாம்.
வெளியில் சிரிப்பதற்கும் ,மனதிற்குள் இருப்பதற்கும் வெவ்வேறு சூழ்நிலைகள் தான் உள்ளது.

மகிழ்ச்சி என்பது ஒரு அளவீடு,
ஆசை எப்படி இருக்கும், அந்த ஆசைக்கு தகுந்த மாதிரி தான் நம் மகிழ்ச்சி அமையும்.
கொஞ்சமாக ஆசைப்பட்டால் மகிழ்ச்சி நிறைய இருக்கும்.நிறையாக ஆசைப்பட்டால் மகிழ்ச்சி பேர் அளவாக இருக்கும்.
சிறிய வீடாக இருக்கும் அங்கே மகிழ்ச்சி நிறைய இருக்கும், பெரிய வீடாக இருக்கும் அங்கே மகிழ்ச்சி இருக்காது.
அத்தனைக்கும் ஆசைகள் தான் அளவுகோலாக அமைகிறது.

குடும்பத்தோடு ,உறவினர்களோடு, சுற்றத்தாரோடு ,நண்பர்களோடு,
சக மனிதர்களாக பேசி வாழ்ந்தாலே,பெரிய இன்பம், அதுதான் பேரின்பம்.அதுதான் மகிழ்ச்சி.

எப்ப ஒரு மனிதன் பெற்றோரிடம், மனைவியிடம்,குழந்தைகளிடம் பேசாமல் வாழ்க்கை நடத்தினால் அது மகிழ்ச்சி கிடையாது.

சக மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ,சக மனிதர்களை எப்படி நடத்துகிறோமோ,அதைப் பொறுத்து தான் நமக்கு மகிழ்ச்சி அமையும்.

நம்முடைய சுற்றத்தார்கள் உறவினர்கள் குழந்தைகள் அனைவரிடமும் மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்.
மனம் விட்டு பேசுங்கள், மனம் விட்டு சிரிங்கள். ஒரு பத்து நிமிடம் ஒருநாளைக்கு கலகலவென்று சிரிங்கள்.உங்கள் வாழ்க்கை மாறுதா என்று பாருங்கள். யாரு என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும்,
கண்ணாடியிடம் உங்களைப் பார்த்து நீங்களே சிரியுங்கள் அந்த சிரிப்பு உங்களை மூலாதாரத்திலிருந்து பக்குவப்படுத்தும், சந்தோஷப்படுத்தும்.

அதீதமாக நம்முடைய எண்ண அலைகளை இன்னும் விரிவு செய்ய வேண்டும்.
நம்முடைய எண்ணங்கள் எளிதாக நிறைவேறும்.
வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும் ஜெயித்துக் கொண்டே இருப்பீர்கள்.

என்னிடம் ஒருவர் நீங்கள் மட்டும் எப்படி ஜெயித்துக் கொண்டே இருக்கிறீர்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.
என்னைப் பொறுத்த அளவில் ஒரு நாளைக்கு 10 தியானம் நிமிடம் செய்யுங்கள் அது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக அமையும்.

வாழ்க்கையில் ஜெயிக்கணும் மகிழ்ச்சி என்பது இருக்கணும் அதாவது மகிழ்ச்சி என்பது உதட்டளவில் மட்டுமில்லாமல், மனதளவிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும், உங்கள் வாழ்க்கையில் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசுங்கள்.தேவையானது செய்யுங்கள், தேவையானதை பேசுங்கள், தேவை இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் பேசாதீர்கள்.
தேவை இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் வாங்காதீர்கள், அப்படி வாங்கினால் வாழ்க்கையில் கடன்பட்டு மகிழ்ச்சி என்பதை தொலைத்து விடுவோம்.

எது தேவையானது, எது தேவையற்றது என்பது நம்முடைய மன ஆசைகளை பொறுத்தது.
நல்லதொரு நிகழ்வை அமையட்டும்.
நன்றி, வணக்கம்

https://youtu.be/JsNC7xPiyCo

தொழில் ரீதியாக எவ்வுளவு அடைந்தாலும் அதை அனுபவிக்க முடியாத காலகட்டம்

அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லாவளமும் பெற வேண்டும்.

ஜாதகருடைய லக்கனம் ரிஷப லக்கணம்.ரிஷப லக்கனத்திற்கு லக்னாதிபதி சுக்ரன் சந்திரன் சேர்கை இருப்பதால் 11-ல், லக்னாதிபதி 11-ல இருக்காரு, 6ம்அதிபதி 11 -ல் இருக்காரு. இந்த ஜாதகததின் நட்சத்திரபுள்ளி ரோகினியும் 11-ம் வீட்டுல பலமா இருக்கு. ஜாதகருக்கு 4ம் வீடு தொழில் சம்மந்தப்பட்டது, வேலை சம்மந்தப்பட்டது. ரிஷப லக்கனத்திற்கு 10ம் வீடு சனி பகவான். ரிஷப லக்கனத்திற் அட்டமத்துல செவ்வாய் சனி. 7-ம் அதிபதி , 9 அதிபதி, 10ம் அதிபதி , செவ்வாய் சனி அனைத்தும் அட்டமத்தில் இருப்பதால் கார்த்திகை நட்சத்திரம் 2ம்பாதம் ,3ம் பாதம், 4ம் பாதம்ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் இதனால் ஜாதகருக்கு 4 வருடம் 5 மாதம் ஜாதகருக்கு வேலை சம்பந்தப்பட்ட தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். 8 – வருமானத்தை கொடுக்கும்.வேலையில் மாற்றத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்

இந்த ஜாதகம். ஒரு ஜாதகத்தில் 5 , 9மிகமுக்கியமான ஒரு விஷயம்.இந்த லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி 9ம் வீட்டில் இருக்கிறார்.

அப்ப9-ம் அதிபதி 9 க்கு 12 ல விரயத்தில் இருக்காரு.அதனால் ஜாதகருக்கு எதிர்பாராத யோகத்தை கொடுத்தாலும் அடைய முடியாது.

லக்னாதிபதியும் விரயத்தில் உள்ளதால் தொழில் ரீதியாக எவ்வுளவு அடைந்தாலும் அதை அனுபவிக்க முடியாத காலகட்டம்.ஆனால் இவருடைய முயற்சியால் இவருக்கு யோகமுண்டு.

ALPலக்கனத்திற்கு பனிரெண்டில் இருக்கக்கூடிய குருபகவான் நமது குருமார்களை, முன்னோர்களை அதாவது தாத்தாவை பலமாக கும்பிட்டால் ஜாதகருக்கு ஒரு மாற்றம் உண்டு.

தன்னுடைய அம்மா , அப்பா வை வணங்கலாம் அதில் யோகம் உண்டு. துர்க்கை அம்மனையும்வணங்குவது பெரிய யோகத்தை கொடுக்கும். இந்த காலத்தில் ஜாதகருக்கு வேலை உண்டானா?

வேலையில் பிரச்சனை இருக்கும். எந்த வேலை வேணாலும் வரும், இதுதான் வேலைனு சொல்ல முடியாது. 10-ம் வீட்டில் இருக்கக்கூடிய கிரகம் சூரியன் ராகு இருப்பதால் எதிர்பார்த்த யோகத்த கொடுக்கும்

இந்த ஜாதகத்துக்கு இப்ப நடக்கக்கூடிய திசை கேது திசை, கேது திசை ALP லக்கனத்தில் இருக்கக்கூடிய அஸ்வினி நட்சத்திரத்திற்கு கேது திசை12-ல் இருக்கக்கூடியது .

கேது 12-ம் வீட்டில அஸ்வினி நட்சத்திரத்தில் இயங்கும். இதனால் கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம்

இது. 10-ம் அதிபதி சூரியன் சனி பார்வையில் இருப்பதால் கஷ்டமான காலம்தான் தொழில் பிரச்சனை உருவாகும்.

இருக்கக் குடிய விஷயத்தை வச்சே சரி பன்னக்கூடிய காலம். இதனால் வேலை முதலில் ,அதற்கு அப்பறம் தொழில் தொடங்கலாம்.

4 வருடம் 5 மாதம் காலங்கள் இந்த ஜாதகருக்கு பிரச்சனை உண்டு அப்புறம் யோகமானநிலை உண்டு.

மீண்டும் ஒரு நல்லதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

இது ஒரு ஜோதிடரின் ஜாதகம்.

அனைவருக்கும் வணக்கம்,

அட்சய லக்ன பத்ததியில் இன்றைக்கு இந்த ஜாதக ஆய்வை பார்ப்போம்.

இது ஒரு ஜோதிடரின் ஜாதகம்.

அட்சய லக்ன பத்ததி லக்கனம் கும்பலக்கனம். கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதி சனி பகவான் 9-ம் வீட்டில் உள்ளார்.

இந்த ஜாதகருக்கு என்ன கேள்வினா?

லக்னத்திற்கு அட்டமத்தில் புதன்,அஷ்டம அதிபதியாக இருப்பதால் ஜாதகருக்கு ஒருவிதமான பதட்டம் பயம்உருவாகும்.

பயம் ஏன்?

கும்ப லக்கினத்தின் ஐந்தாம் அதிபதி புதன். அட்டமாதிபதி 5, 8 சம்பந்தப்படுவதால் மன சங்கடங்கள் உருவாகும்.

லக்கின புள்ளி பூரட்டாதி நட்சத்திரம்.3 வருடம் 4 மாதம் 2021 பிப்ரவரியில் இதுமுடியும்.

லக்னத்தை இயக்கக்கூடிய லக்ன புள்ளி , நட்சத்திர புள்ளி,அட்சய லக்கன புள்ளி குருவோட நட்சத்திரம் பூரட்டாதி நட்சத்திரம் அதனால் குரு ஆறில் நீச்சம் பெறுகிறது.இதனால் மன பயம் உண்டாகும்.

கடன் கொடுக்கும் வழக்குகொடுக்கும்,

தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும்.அட்டமத்தில் புதன் இருப்பதால் ஜாதகருக்கு மனபயம் உருவாகும்.

அட்டமத்தில் புதன் இருப்பதால் பிரச்சனைகள் இல்லை ஆறில் குரு பகவான் விஷயத்தில் பிரச்சனைகள் உருவாகும்.ஏன்னா இரண்டாம் அதிபதி கடன் ,குடும்பாதிபதி கடன் ,பதினோராம் அதிபதி கடன்அதனால் 3 வருடம் 4 மாத காலம் அனைத்தும் இருந்தும் எதையும் இயக்க முடியாது சூழ்நிலை உருவாகும்.

இந்த ஜாதகருக்கு ஐந்தாம் அதிபதி அட்டமத்தில் செல்வதால் தான் பயம் உருவாகும்.மூன்று வருடம் நான்கு மாத கால நிலை முடிவடைந்தது ஏன்னா குருவோட நட்சத்திரத்துக்கு முன்னாடி ராகுவோடநட்சத்திரம் செவ்வாய் ராகு 11ல் இருந்திருக்கு.அடுத்தது லக்னத்திற்கு நட்சத்திர புள்ளி சதய நட்சத்திரம் ராகுபலமா இருந்திருக்கு அதனால் எந்த பயமும் இல்லை ஆனால் குருவோட நட்சத்திரம் வரும் பொழுது பயம் உருவாகி இருக்கும். உடலளவிலும் மனதளவிலும் இந்த ஜாதகருக் பயம் உண்டாகும்.

2021 பிப்ரவரிக்கு அப்புறம் ஜாதகர் யோகமான நிலையை அடைவார்.அட்டமாதிபதி புதன் திசைஎன்பதால்ஜாதகர்அதிகமாக பயப்பட வேண்டிய நிலை உருவாகும். 5ம் அதிபதி அட்டமத்தில் அட்டமாதிபதிபுதன் சனியுடன் சம்பந்தப்படுவதால் ஜாதகர் அதிகமாக பயப்படக்கூடிய சூழ்நிலை இருக்கு.2020 நவம்பர் மாதத்துடன் இந்த புதன் திசைமுடிவடைகிறது.எல்லா கிரகங்களும் எல்லா சுப அசுப தன்மைகளைகொடுத்துக் கொண்டுதான் இருக்கும்.

நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களுடைய பங்களிப்பை இந்த கிரகங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் இந்த ஜாதகருக்கு எதிர்பாராதவிஷயங்கள் ஏன் வந்திருக்கு?அட்டமத்தில் உள்ள புதன் சித்திரை நட்சத்திரத்தில் இருக்கு,அதே புதன் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்தால் இந்த ஜாதகருக்கு அதிகமான பிரச்சனை கொடுத்திருக்கும்.

சித்திரை நட்சத்திரம்இந்த லக்னத்துக்கு11 ல்இருக்கக்கூடிய நட்சத்திர பாதம்.அதாவது 3 , 10க்கு உடையவர்சாரத்தை பெற்று, 11ல்இருக்கக்கூடிய செவ்வாய் சாரத்தை பெற்றதால்புதன், திசைபெற்றிருப்பதால் ஜாதகர் பயப்பட வேண்டிய நிலை இருக்கும்.

2020நவம்பர் நல்ல நிலையை கொடுக்கும்.புதன்உத்திரத்தில் இருந்தால், 7ம் அதிபதியான சூரியன் அட்டமத்துல வருவதால் தேவையில்லாத சண்டைகள் ,கணவன்-மனைவி பிரச்சினைகளை உருவாக்கும்.புதன் செவ்வாயோட நட்சத்திரம் ,சித்திரை நட்சத்திரத்தில் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும்.நல்லதொரு வாய்ப்பே இந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும்.அடுத்தது பூரட்டாதி நட்சத்திரம் 2021பிப்ரவரி மாதம் முடிகிறது .லக்கனம் மீன லக்கனம்,மீன லக்கனத்திற்கு பத்து வருஷத்தை இயக்கக்கூடிய லக்னாதிபதி குரு பகவான்.லக்னத்திற்கு 5ல இருக்காரு.

ஜாதகர் பலமா இருக்காரு.உத்திரட்டாதி நட்சத்திரம் 5 வரும்பொழுது ஜாதகருக்கு 4 வருடம் 5 மாதம் பிரச்சனையாக இருக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.ரேவதி நட்சத்திரம், புதன் 7-ல் உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் கொஞ்சம் கவனமாக இருக்க கூடிய காலக்கட்டம் .

மீண்டுமொரு இனிய நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி, வணக்கம்.