அட்சய லக்ன பத்ததியில் ஒருவருக்கு எப்படி பலன் பார்க்கப்படுகிறது?

அன்பே சிவம், அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் அட்சய ராசி என்ற இரண்டாவது நூல் வெளிவந்துள்ளது.

இந்த அட்சய லக்ன பத்ததியில் லக்கனம்  வளரக்கூடிய தன்மைகளும், ராசி வளர்ந்து அதனுடைய பலன்கள் எப்படி இருக்கும் என்ற தன்மைகளும் இரண்டாவது புத்தகத்தில் வெளியிட்டுள்ளேன்.

அட்சய லக்ன பத்ததியில் ஒருவருக்கு எப்படி பலன் பார்க்கப்படுகிறது?

லக்னம் மேஷ லக்னம், அவருடைய 30 வயதில் மிதுன லக்னம்,மிதுன லக்னத்திற்கு தசாபுத்தி பார்க்கணும்.

இன்றைக்கு நடக்கக்கூடிய தசாநாதன் ,புத்தி நாதன் எங்கிருந்து இயக்குகிறார் என்பதை பார்க்கணும். இதுதான் நம்முடைய அட்சய லக்ன பத்ததி பார்க்கப்படுவது.

இதை வைத்தே ஜாதகத்தை ஆய்வு செய்யலாம்.

உதாரணமாக, மிதுன லக்னத்திற்கு ராகு திசை நடக்கிறது. பிறந்த கன்னி ராசி. இன்றைக்கு துலாம் ராசியில் அட்சய ராசி இயங்குகிறது.

ராகு திசை அட்சய லக்னத்திற்கு 5ம் வீட்டை இயக்குகிறது. ஆனால் இந்த ராகு பகவான் ,உதாரணமாக அட்சய லக்கினத்திற்கு 11ல் நிற்கிறது.

அவர் எதிர்பார்த்த யோகங்கள், எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாமே பெரிய பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கும்.

மிதுன லக்னத்திருந்து 5ம் இடத்தை சுவாதி நட்சத்திரத்தில் இருந்து ராகு தசை இயக்குகிறது. தசை நாதன் ராகு 11-ல் இயக்குறார். கோடி கோடியான செல்வம் கோடி கோடியான பிரம்மாண்டத்தை கொடுக்கக்கூடிய காலமாக இது அமைகிறது.

30 வயதிற்குள்ளேயே இந்த ஜாதகருக்கு பெரிய கோடிஸ்வரன் ஆகும் வாய்ப்பு உள்ளது.

குருதிசை வரக்கூடிய காலகட்டத்தில் முதல் மூன்று பாதங்கள் விசாகம்1, விசாகம்2, விசாகம்3, செல்லக்கூடிய காலகட்டத்தில்

3,6க்குடையவன் ராசியிலிருந்து லக்கனம் கடக லக்கனம், ஆக மாறுகிறது. கடக லக்கினத்திற்கு  6ம் வீட்டில் குருபகவான் நடத்துவார்.

குருபகவான் கடக லக்கினத்திற்கு 9ம் வீட்டிலிருந்து நடத்துவார்.இதனால்

எதிர்பாராத யோகம் உண்டாகும்.நாலைந்து கட்டிடங்கள் கட்டி பெரிய கோடீஸ்வரனாக வாழ்வார். மேஷ லக்னம் ஜென்ம லக்னம் ,ALP லக்னத்திற்கு 12ல் குரு. அதனால் யோகத்தை செய்யாது.

கடக லக்னத்தில் 9ம் இடத்தில் இருந்து குரு, தசாநாதன் யோகத்தை கொடுப்பார் என்பது தான் அட்சய லக்ன பத்ததியில் என்னுடைய ஆய்வு.

ஒவ்வொரு காலமும் மாற மாற, வயது மாற மாற ,அவர்களுடைய வாழ்க்கை ஒரு மாற்றத்தை கொடுக்கும்.

வயது மாற்றம் கொடுக்கும்போது அட்சய லக்னம் அதற்கு தகுந்தார்போல் பலனை கொடுக்கும்.

  • 20 வயதில் சுக்கிர திசை வருவதற்கும்,
  • 60 வயதில் சுக்கிர திசை வருவதற்கும்,
  • 80 வயதில் சுக்கிர திசை வருவதற்கும் யோகம் உண்டு.

ஒருவருக்கு 40 வயதில் சுக்கிர திசை வரும் பொழுது ஓரளவு வளர்கிறார். 80 வயதில் கோடீஸ்வரன் ஆகிவிடுகிறார்.

மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கக்கூடியது இந்த அட்சய லக்கனம், எங்கிருந்து யார் இயக்குகிறார் என்பதுதான்.

அட்சய லக்னத்திற்கு அடுத்த அதிபதி யார் இயக்குகிறார். உதாரணத்திற்கு கடக லக்னத்திற்கு அடுத்த 10 வருட அதிபதி சந்திரன். அதனால் யோகமாக இருக்கும்.அதற்குள் இருக்கக் கூடிய நட்சத்திரங்கள் புனர்பூசம் ,பூசம், ஆயில்யம். இந்த மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர அதிபதிகள் பலமாக அமையவேண்டும். குரு,சனீஸ்வரன், புதன்.இந்த 3 கிரகங்களும் பலமாக அமைந்தால் மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும், மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

மூன்று கிரகங்களும் சந்திரனுக்கு 6 ,8 , 12ல் மறைந்தால் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இந்த ஜாதகருக்கு யோகத்தை கொடுக்காது.

எந்த பாதையில் அதிகமா வெற்றி கிடைக்கும் என்பதை அடுத்த நிகழ்வில் பார்ப்போம்.

நல்லதொரு நிகழ்வே அமையட்டும்.

நன்றி ,வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/fBQLemFc-vE

அருள் சார்ந்த மூட்டை என்பது நம்முடைய மனம்

அன்பே சிவம், அன்பே ஆனந்தம் ,

அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

இன்றைக்கு நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிகழ் காலத்தில் நிறைய பேர் தன்னுடைய பயணம் உடைமைகளை தூக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு வந்தனர்.இது பொருள் சார்ந்த மூட்டை, பொருள் சார்ந்த மூட்டையை தூக்கிக் கொண்டு நம்மால் ரொம்ப தூரம் பயணிக்க முடியவில்லை.

அருள் சார்ந்த மூட்டை என்பது நம்முடைய மனம்.

நம்முடைய வாழ்க்கையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நம்முடைய உயிர் பிரிந்து செல்லும் பொழுது,எண்ணங்களும் நிறைவேறாத ஆசைகளும் தூக்கிக் கொண்டு இன்னொரு லோகத்திற்கு செல்லும் பொழுது மிகப்பெரிய அளவில் கஷ்டப்படுவார்கள்.

சில விஷயங்கள் வேணும், வேண்டாம், நம்புகிறோம், நம்பல  இதுதான் உண்மை.

நம் ஜோதிட முறையில் அடைப்பு நட்சத்திரம் என்று சொல்வார்கள்,

அதற்கு 45 நாள் விளக்கு ஏற்றி பரிகாரம் சொல்லுவார்கள்.

 

சுமையுடைய மூலாதாரம் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் நம்முடைய ஆசைகள் தான்.நான் பார்த்த நான் கேட்ட அத்தனை விஷயங்களும் ஆசைகளில் இருந்து தான் ஆரம்பமாகிறது.ஆசைகள் தான் அடிப்படைக் காரணம் அதிலிருந்து பரிணமித்து இன்பமாக, துன்பமாக ,நல்லதாக, கெட்டதாக, பயணமாக,வாழ்க்கையாக, நோய்நொடி யாக, வருமானமாக,சந்தோஷமாக உள்ளது.

மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது மனம் சந்தோஷமாக இருக்காது, அதுவே சங்கடமாக உள்ளபோது மனம் ரொம்ப இறுக்கமாக இருக்கும்.இதனுடைய மூலாதாரம் ஆசை.

இந்த ஆசைகள் உடைய தன்மைகள் ஒவ்வொரு பயணம் முடியும் பொழுது அந்த மூட்டைகளை தூக்கும் பொழுது  தான் நமக்கு தெரியும். ஒண்ணுமே இல்லாத விஷயத்திற்கு தான் நாம் இவ்வளவு நாள் ஆசைப்பட்டுள்ளேன்.ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு தான் சுமைகளாக சுமந்து கஷ்டப்பட்டு உள்ளோம்.

வாழ்க்கையின் சுமைகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ வாழ்க்கையில் மாற்றம் உருவாகும்.

எனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும் நிறைய மூட்டைகளை சுமக்கிறோம்.

நமக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகிறது.நம்முடைய எல்லா எண்ணங்களும் ஒரு மூட்டையாக கட்டி கட்டி வைத்துள்ளோம்.அதனுடைய ஆரம்பமும், முடிவும் ,அன்றைய நாள் இரவில் முடியும் பொழுது மன இறுக்கங்களும், சங்கடங்களும், சார், எனக்கு இரவு சரியாக தூக்கம் வரவில்லை என்று சொல்வார்கள்.

எப்படி தூக்கம் வரும். மனது முழுவதும் அடைத்து வைத்துள்ளோம்.

காலையில் இருந்து இந்த இரண்டு விஷயங்களை முக்கியமாக  கவனிக்கணும். காலையில் மனித உடலின் கழிவுகள், மலம் என்று சொல்லக்கூடிய கழிவுகள்.இரவில் மனம் சொல்லக்கூடிய எண்ணங்கள்.

இந்த இரண்டையும் சுத்தப்படுத்தினால் தான் நம் வாழ்க்கை வாழ முடியும்.

உணவு உண்பது, எண்ணங்களை தூண்டுவது ,இது நம் வாழ்க்கையில் மறுக்க முடியாதது.மறைக்க முடியாது ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்.

தேவையான விஷயத்துக்கு மட்டும் பயணிக்கணும், தேவையான விஷயத்தை மட்டும் பார்க்கணும்.

சுமையை நிறைய தூக்கி சுமந்தால் கண்டிப்பாக உடலும், மனமும் பாதிக்கப்படும்.

சுமையை தூக்கி சுமந்தால்

நெடுந்தூரத்திற்கு பயணிக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுமைகள் வரலாம்.

வாழ்க்கை பயணத்தில்நிறைய சுமைகளை தூக்கி,

அந்த சுமைகள் நம்முடைய ஆசைகள்.

எல்லாவற்றிற்கும் ஆசைப்படலாம். ஆனால், உங்கள் மனம் விரும்பக் கூடிய ஒரு விஷயத்தை மட்டும் தான் அடைய முடியும்.அந்த ஒரு விஷயத்தில் மட்டும் புரிந்து இன்னும் ஆசைப்பட்டால் சந்தோஷமாக இருக்கும்.

10 பொருள்கள் ஆசைப்பட்டு வாங்க முடியாது.

அதே போல் 10 பாதைகளில் உங்கள் வாழ்க்கை செல்ல முடியாது. அந்த ஒரு பாதையில் தான் செல்ல முடியும்.அந்த ஒரு பாதையை முழுவதுமாக அடைந்து விட்டு, மறு பாதையில் செல்லலாம்.

எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால் எந்த பாதையிலும் செல்ல முடியாது.

ஆசைகளும் சுமைகளும் வாழ்க்கையின் இரு கண்கள்.இதை இரண்டையும் சரியாக பயன்படுத்தி,சந்தோஷமாக சென்றால் என்னுடைய ஆசைகளும் நிறைவேறும், என்னுடைய எண்ணங்களும் நிறைவேறும். இதன்படி சென்றால்

வாழ்க்கைப் பயணத்தில் வெற்றியை அடைய முடியும் என்பதுதான் என்னுடைய வாதம்.

அடுத்தவங்க பாதையில் நாம் பயணிக்க முடியாது.

சுமைகளை தேவையான அளவு தூக்கி வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற வேண்டும்.நல்லதொரு நிகழ்வே அமையட்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.

நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/z2ymsfgoONk

அட்சய லக்ன பத்ததியில் பிரசன்னம் எப்படி பார்பது?

அனைவருக்கும் வணக்கம்,

அட்சய லக்ன பத்ததியில் பிரசன்னம் எப்படி பார்பது?

வந்திருக்கவங்க கேள்வி எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்

உதாரணமாக சித்திரை, வைகாசி, ஆனி ,ஆடி மாதம் சூரியன் எங்கே இருக்கும்?

பிரசன்ன லக்னம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் லக்னம் மாரும், உதாரணமாக மென்பொருளில் 1′ முதல்.

120 குள் எதாவது ஒரு எண்,

உதாரணத்திற்கு அவர் சொன்ன எண் 46,  வயது, 46 நம்பர் இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம். 46 வயது எடுத்தேன். ஒரு வயது 3′ நகரும். 12 ராசி கட்டங்களின் மொத்த அளவு 360′

ஒரு மனிதனுடைய ஆயுள் காலங்கள் தசா வரிசைகள் 120.

360/120 அதாவது ஒரு வயதுக்கு நம்முடைய உடல் 3′ பெருக்கம் அடைகிறது.

இதுதான் நம்முடைய அட்சய லக்னம்.

46 x 3 = 138′

அவருடைய லக்னம் நகர்ந்திருக்கிறது. நாம் இரண்டு முறையில் பிரசன்னம் பார்க்கிறோம்.

போன ஜென்மத்தில் நம்முடைய உடல் அழிந்த பகுதியிலிருந்து இப்பொழுது ஆரம்பிக்கப் படுவதை லக்னம் என்கிறோம்.

சூரியனுடைய ஆத்ம கிரகம் எங்கிருந்து அழிக்கப்பட்டதோ அங்கிருந்துதான் தொடங்கும். ரிஷப லக்னத்தில் 8′ மீதம் இருக்கும்.ஒரு நட்சத்திர பாதத்தில் 3, 20 பாகை  6,40 பாகை லக்னப்புள்ளி செல்லும்.

கார்த்திகை 4ம் பாதம் லக்கனத்திலிருந்து ALP லக்னம் என்ன என்பது தான் கேள்வி, 6 என்றால் கடன், வம்பு, வழக்கு, நோய் நொடி சம்பந்தப்பட்டது உருவாகும். சூரியன் பலமான நட்சத்திரம் என்பதால் 1, 2, 3, 4, வீடு, இடம், பொருள், சொத்து வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்டது. சூரியன்எங்கு உள்ளதோ அங்குதான் பிரச்சனை உண்டாகும். ALPலக்னத்திற்கு சூரியன் 3-ம் இடத்தில் உள்ளது.

3ம் இடம் சகோதரம், அதாவது 3, 8,11 சம்பந்தப்படும் பொழுது சகோதர வழியில் இதன் பிரச்சனை உண்டாகும். ஒரு பங்கு பிரித்தால் பிரச்சனை தீரும். கார்த்திகை முடிந்து ரோகிணி நட்சத்திரம் வந்தால் கண்டிப்பாக மாற்றம் உருவாகும். 1 டிகிரி 4 மாதம். 8 மாதம் பிரச்சனையாக இருக்கும். வீடு வாங்கினால் விரயம் ஏற்படும். விற்றாலும் பணம் சரியாக கிடைக்காது. கேட்கக் கூடிய நேரத்தில் கேள்விக்கான பதில் கொடுக்கனும். இப்படி சில விஷயங்களை

அட்சய லக்ன பத்ததியில் ஆய்வு செய்கிறோம்.

பிரசன்னம் முறையில் ஆய்வு செய்கிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அட்சய லக்ன

பத்ததியின் மென்பொருளில் இந்த விஷயங்களை, கூட்டி உள்ளோம். மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/tQwoa9hmZQo

 

நான் பாசக்காரன். பாசத்தை பற்றி இன்று உங்களுடன் பேச வந்துள்ளேன்

அன்பே சிவம் ,அன்பே ஆனந்தம், அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

நான் பாசக்காரன். பாசத்தை பற்றி இன்று உங்களுடன் பேச வந்துள்ளேன்,

பாசம் என்பது உயிருள்ள பொருள்கள்மீது மட்டுமில்லை, உயிரற்ற பொருட்களின் மீதும் பாசம் வைக்கணும். அதை தான் கூறுகிறேன்.

பொருட்களை இது உயிருள்ளது உயிரற்றது என பிரிக்க வேண்டாம் எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள்.கண்டிப்பாக வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

இது உயிரற்றது ,உயிர் உள்ளது என்று ஒவ்வொரு பொருட்களை நாம் சொல்கிறோம். ஆனால் அதில் ஒவ்வொன்றுக்கும் உயிர் உண்டு.

வாழ்க்கையில் நாம் எப்படி இயங்குகிறோமோ அதேபோல்தான் வாகனங்களும் இயங்குகிறது.

நான் ஒவ்வொரு தடவையும் வெளியில் செல்லும் பொழுது வீட்டை தொட்டு வணங்கி விட்டு தான் செல்வேன். அது எனக்கு வீடு கையசைத்து போய்ட்டு வா என்று கூறுவது போல் இருக்கும்.

தேவையான பொருள், தேவையற்ற பொருள் என்ற விஷயத்தை விட நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும் ஒருமுறை நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் நன்றி சொல்லும் பொழுது ஒரு பாசம், ஒரு இணைவு உங்களை அடுத்த கட்ட பரிணாமத்திற்கு அழைத்து செல்லும்.

உங்கள் பேனா உங்கள் சட்டைப்பையில் இருப்பதற்கு நன்றி சொல்லுங்கள். அதன்பிறகு நீங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்தும், வெற்றி பயணத்திற்கான கையெழுத்தாகும்.

நான் ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடனும், தூங்க செல்வதற்கு முன்னும் பஞ்சபூதங்களுக்கு நன்றி சொல்வேன். கடவுளுக்கும் நன்றி சொல்வேன்.

பஞ்சபூதம் ஆன இந்த உடல் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆனந்தமான வார்த்தை.

நீங்கள் ஆனந்தமாக வாழ வேண்டுமென்றால் முதலில் நன்றி சொல்லுங்கள்,

கை தட்டுங்கள்,சந்தோஷமான ஒரு நிகழ்வை கொடுக்கும் .உங்கள் வாழ்க்கை மாறும்.

உணவு சாப்பிடும் பொழுது இந்த உணவை தொட்டு நன்றி சொல்லுங்கள். அந்த உணவு உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு சக்தியாக அமையும்.உடலுக்கு மருந்தாக சென்று உடலும் மனமும் சந்தோஷமாக இருக்கும்.

வாழ்க்கையில் எல்லா பொருட்களின் மீதும் அன்பு செலுத்துங்கள். இது வேண்டும், இது வேண்டாம் என நினைக்க வேண்டாம்.உங்களுடைய தேவையான பொருளுக்கு ஒவ்வொரு முறையும் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.

ஒரு நாள் 10 பொருட்களுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்த நாட்கள் 20 பொருள்கள் உங்கள் கண்ணில் படும்.

தொலைத்தொடர்பு கோபுரங்கள் அதற்கு ஒரு நன்றி சொல்லுங்கள்.அதன் பிறகு உங்களுக்கு போன் வந்தால், அந்த இணைப்பு துண்டிக்கப் படாமல் வரும்.

இது என்னால் உணர முடிந்த ஒரு விஷயம்.

எல்லா பொருட்களின் மீதும் அன்பு செலுத்துங்கள்.

ஆனந்தமாக வாழ்வதற்கு எல்லா பொருட்களும் துணையாக இருக்கும்.

நல்லதொரு நிகழ்வே அமையட்டும் நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/cRpv-GzlSPI

இந்த விஷயத்தை வாழ்க்கையை நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக 100% வெற்றி உங்களுக்கு

அன்பே சிவம், அன்பே ஆனந்தம் ,அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. இன்று ஒரு விஷயம் சொல்கிறேன்.

இந்த விஷயத்தை வாழ்க்கையை நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக 100% வெற்றி உங்களுக்கு.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய கர்மாவை கழிக்க,

உங்களுக்கு தெரிந்த விஷயத்தை யாருக்காவது ஒருவருக்கு சொல்லிக் கொடுத்து விடுங்கள். அந்த குரு உபதேசத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுத்து விடுங்கள்.

உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை அறிவுரை மூலமாகவோ, கலந்துரையாடல் மூலமாகவோ மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விடுங்கள்.அப்படி சொல்லிக் கொடுப்பதால் உங்களுடைய வாழ்க்கை 100% கண்டிப்பாக மாறும்.

உங்களுடைய கர்மாவை கழிக்க மிகப்பெரிய ஆயுதம் என்னவென்றால் நீங்கள் குருவாக மாறுவது ‘இல்ல,குருவாக உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்வது இதுதான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.

உங்களுக்கு தெரிந்த ஒன்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை மாறும். உங்களை சார்ந்த நண்பர்கள் உடைய வாழ்க்கை மாறும்.

உங்களுடைய கர்மாவும் கழியும்.

நல்லதொரு நிகழ்வு அமையட்டும், உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக மாறும்.

உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும்.

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று”.

எனக்கு தெரிந்த சின்ன விஷயத்தை ,எனக்கு ஜோதிடம் நன்றாக தெரியும். ஜோதிடத்தில் முன்ஜென்மம் எனக்கு மிகவும் நன்றாக தெரியும்.கேக்குறாங்க ,கேட்கல,புரியுது, புரியல’நான் சொல்லிட்டேன், என்னுடைய வெற்றிக்கு இதுவும் ஒரு ஏணிப்படி.

என்னுடைய வெற்றிக்கு இதுவும் ஒரு ஏணி படியாக அமையட்டும்.

நன்றி, வணக்கம்.